Thursday, December 31, 2009

நம்ம ஊரு நல்ல ஊரு

ஆயிரம் ஊர்களை நாம பார்த்து இருந்தாலும் நம்ம ஊர் போல வருமா? சும்மா விக்கிமேப்பியால வேற ஒரு விசயமா நோண்டிக்கிட்டு இருந்தப்ப நம்ம ஊர் எப்படி இருக்கும்னு பாத்தேன். இந்த படத்தை பாக்கும்போது கழுகு பார்வை (Eagles View) மாதிரி இருக்குல்ல... நீங்களும் பாருங்க..

By
Karthi

Thursday, December 24, 2009

First Anniversary

இந்த‌ வ‌லைப்பூ ஆர‌ம்பித்து இன்றோடு ஒரு வ‌ருட‌ம் பூர்த்தியாகிவிட்ட‌து!....
நான் துபாய் வ‌ந்து கிட்ட‌த்த‌ட்ட‌ ஏழு ஆண்டுக‌ள் முடிந்து விட்ட‌ன‌.எண்ணிப்பார்க்கையில் கால‌த்தின் ஓட்ட‌ம் பிர‌மிப்பு அளிக்கிற‌து. அடேங்க‌ப்பா!
நான் இங்கு நிறைய‌ சொல்ல‌னும்னு(எழுத‌னும்னு!!) நினைக்கின்றேன்..ஆனா எவ்வ‌ள‌வு என்ப‌து இப்பொழுது என‌க்கு கிடைக்கும் நேர‌த்தை பொறுத்து தான்...ச‌ரி இனிமேல் ஆங்கில‌த்திலேயே த‌ட்ட‌ச்சு செய்து விடுகிறேன்... என்ன‌டா பீட்ட‌ர்ஸ் ஆஃப் இந்தியானு நினைக்காதீங்க‌....

it is easy to type in english rather than type in tamil...i feel atleast i can post a piece of information with in this short span of time...i thought of writing this blog well in advance (atleast a week before) so that i can write a lot...but due to the time constraint i just started now...anywayz..

i remember well that, i and karthi are be in touch through email from 2000 onwards..so i dont feel like i missed him..every now and then we were constantly in touch...But i have completely lost the contacts of other quarry friends after our 10th era ends....though the mobile phone exists but that was not that much supportive to keep in touch with all our friends...then karthi had come up with an idea of creating blog! thats when "Quarry Birds" start flying over the (inter)net...
the place where it brought almost all the lost contacts of mine!!! i couldnt able to believe stiil that i can able to see the snaps of our quarrysites...for e.g Asokan, Arulmurugan, sivakumar, sakthivel, Annal, Sanju, boby prasath, Ramesh, Paulraj,Mathiyalagan, ramkumar anna, Srikanth anna, Sriram, sudhanthiramani, koodalarasan, senthil pandiyan etc etc... wish this list should continue for ever....

okay dudes! with this im stoping for the time being...will continue in the future episodes..

WISH YOU ALL A VERY HAPPY CHRISTMAS!!

Monday, December 14, 2009

ரேனிகுண்டா

ஏதோ தெலுங்கு படம்னு நெனச்சுதான் உள்ளே போனேன். டைட்டில் பாத்தப்பவே விதயாசம் தெரிஞ்சுபோச்சு..இது விவகாரமான படம்தான்னு. நடிச்சிருந்த பசங்கள்ல யாருக்கும் 20 வயசு தாண்டாது. எங்கதான் புடுச்சாங்கன்னு தெரில.. அடேங்கப்பா ஒவ்வ்ருத்தன் மூஞ்சிலயும் கொலவெறிதான். டப்பான்னு ஒரு கேரக்டர்... படத்துல இவன் அராத்துதான் ஜாஸ்தி. ஆளுக்கும் செயலுக்கும் சம்பந்தமே இல்ல.. அப்புறம் வசனம் நம்ம சிங்க்பபுலி. மாயாண்டி குடும்பத்தார் படத்துல வந்த லூசுதான். பின்னிட்டாப்ல. மீ, மை ப்ரெண்ட்.. ஒரு டீம் வொர்க்..ன்னு கொலை செய்யறதை என்னமோ பி.பி.ஓ ஆபிசராட்டம் சொல்லுவான் பாரு.. தியேட்டரே அதுருல்ல.

தேவகோட்டைல ஆரம்பிச்சு ரேணிகுண்டால முடியுது படம். என்னதான் கேமரா யூஸ் பண்ணி இருப்பாங்கன்னு தெரியல.. நல்ல விசுவல் வந்து இருக்கு. பிண்ணனி மிரட்டுது. “மாட்டுத்தாவணி” பாட்டு மட்டும் முணுமுணுக்கலாம். மத்த பாட்டு மனசில நிக்கல. எல்லாருமே புதுமுகம் ஹீரோயின் உள்பட. ஆனால் எல்லாரும் படத்துல பட்டய கிளப்பிட்டாய்ங்க.. ஹீரோயினுக்கு பார்ட் ரொம்ப கம்மிதான். பொண்ணுக்கு 13 வயசிருந்தாலே அதிகம்தான். விட்டா 10 வயசு பொண்ணைக்கூட ஹீரோயினா ஆக்கிருவாங்க போல..

எல்லாரும் ஒரு தடவை போய் பாக்க வேண்டிய படம்தான். என்ன ஒன்னு.. கொலை செய்யும் போதெல்லாம் தியேட்டர்ல வர்ற விசில் சத்தத்தை பார்த்தா எல்லாருக்குள்ளும் ஒரு கிரிமினல் ஒளிஞ்சு இருக்கான். அது மட்டும் கிளியரா தெரியுது.

செலவே இல்லாமல் ஒரு செம ஹிட் படம்.

Wednesday, December 9, 2009

Karthi in Rameshwaram







Hello Friends,

Last sunday we were went to Rameswaram and had a nice trip. I couldn't meet vidhya akka but i had spoke to her. She moved to her new own house and it was too far from the temple. Also she was not available on that day at rameswaram.

Friends... keep post your recent snaps in our blog.

Luv karthik.

Tuesday, December 1, 2009

Recession in Dubai - Current affair

திரும்பிப் பார்ப்பதற்குள் ஒரு வருடம் முடிந்து விட்டது. உலகை உலுக்கிய பொருளாதார பிரச்னை, உலக நாடுகள் அனைத்திற்கும் பரவ ஆரம்பித்தது. எரிந்த தீ அணைந்து விட்டதா? இன்னும் எரிந்து கொண்டிருக்கிறதா? விடை தெரியத்தான் இந்தக் கட்டுரை.

சரியாக செப்., 2008ல் தான் அமெரிக்காவின் மிகப்பெரிய முதலீட்டு வங்கியான "லேமென் பிரதர்ஸ்' மூழ்கி விட்டது என்ற செய்தி வந்தது. அதைத் தொடர்ந்து உலகின் பல பகுதிகளிலும் இருந்து வந்த செய்திகளும் உலகையே திருப்பிப் போட்டு சென்றது.யானை புகுந்த கரும்புத் தோட்டம் போல் ஆனது உலகம். பங்குச் சந்தைகள் இருந்ததில் பாதியை இழந்தன. வங்கிகள் பல மூழ்கின. அரசாங்கங்கள், என்ன செய்வது என்று தெரியாமல் முழித்தன.அடிபட்டவர்கள் பல லட்சக்கணக்கானோர். எழுந்தவர்கள் சில லட்சம் பேர் தான். ஆனால், கற்றுக் கொண்ட பாடங்கள் ஏராளம். ஏனெனில் பலர் இது போன்ற நிகழ்வுகளை வாழ்க்கையில் சந்திக்காதது.அதிகம் பாதிக்கப்படாத நாடுகள் மிகவும் குறைவாக இருந்தன. அதில் இந்தியாவும் ஒன்று என்பதில் நமக்கு மிகவும் பெருமை.

விழுந்த காரணம் என்ன? அளவுக்கு அதிகமான சம்பளம், போனஸ் (அதாவது கோடிக்கணக்கில்) என்று கொடுத்து எடுக்கப்பட்ட எம்.பி.ஏ., இளைஞர்களுக்கு கொடுக்கப்பட்ட கட்டளைகள், என்ன செய்தாவது கம்பெனியின் வருமானத்தை உயர்த்துங்கள் என்று. ஆதலால் பலருக்கு ஏதாவது செய்தாவது லாபத்தை கூட்ட வேண்டும் என்ற எண்ணங்கள், செயல்பாடுகள்.அதில் ஒன்று தான் நிதி ஆதாரம் அதிகம் இல்லாதவர்களுக்குக் கூட அதிகப்படியான வீட்டுக் கடன்களை வாரி வழங்கியது. வட்டி மிகவும் குறைந்திருந்த போது வாங்கிய அளவுக்கு அதிகமான கடன்கள் பின்னர் வட்டி கூடிய போது வட்டி கூட கட்ட முடியாத ஒரு சூழ்நிலை.வீடுகளின் விலை வேறு குறைய ஆரம்பித்தது. உலகளவில் இந்தக் கம்பெனிகள் முதலீடு செய்திருந்த முதலீடுகளும் பங்குச் சந்தையின் பாதிப்பால் மதிப்பு குறைய ஆரம்பித்தன. நஷ்டங்கள் லட்சக்கணக்கான கோடிகளில்.கடன்கள் திரும்பி வராமல் போனதால் வங்கிகளுக்கும், வீட்டுக் கடன் நிறுவனங்களுக்கும் மிகப்பெரிய நஷ்டம். ஆதலால், கொடுத்த கடன்கள் திரும்ப வராததால் பல வீட்டுக் கடன் நிறுவனங்களும், நூற்றுக்கணக்கான வங்கிகளும் திவாலாகி வந்தன.

எப்படி திரும்ப எழுந்தது?திரும்ப எழ காரணம், அரசாங்கங்களின் ஒத்துழைப்பு தான். பல நிறுவனங்களுக்கும், வங்கிகளுக்கும் பல லட்சம் கோடிகள் பண உதவி செய்து அந்த கஷ்டமான சூழ்நிலையிலிருந்து மீள வழிவகை செய்தது. எல்லோருடைய ஒருங்கிணைந்த முயற்சி தான், விரைவில் மீண்டெழுந்ததற்கான காரணம். அதனால், பல நிறுவனங்கள் தப்பின.இருந்தாலும், நூற்றுக்கணக்கான நிறுவனங்கள் காணாமல் போயின. இதில் நூறாண்டுகள் கழிந்த நிறுவனங்களும் அடங்கும்.இது தவிர மக்களும் தங்களது வாயைக் கட்டி, வயிற்றை கட்டி இருந்ததும் ஒரு காரணம். அதாவது, அந்த கஷ்டமான சூழ்நிலையில் பெரிய செலவு ஏதும் செய்யாமல் இருந்தனர். கம்பெனிகளும் தங்கள் செலவுகளை கட்டுப்படுத்தின. ஆதலால், அவர்களின் லாபம் கூடியது. விற்பனைகள் குறைந்த போதும் லாபம் கூடியது.

திரும்பி வந்த பங்குச் சந்தை நஷ்டங்கள்:பங்குச் சந்தையில் ஏற்பட்ட நஷ்டங்களை பலர் ஒரு வருடத்தில் திரும்பப் பெற முடிந்தது மிகவும் ஒரு ஆச்சரியமான விஷயம் தான். இதற்கு முந்தைய பொருளாதார நெருக்கடிகளில், அதாவது, 1987ம் ஆண்டு முதலீட்டாளர்கள், தாங்கள் இழந்தவற்றை திரும்பப்பெற இரண்டு வருடங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. 1973ம் ஆண்டு ஏற்பட்ட நெருக்கடியில் முதலீட்டாளர்கள் மூன்று வருடங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது.ஆனால், 1929ம் ஆண்டு ஏற்பட்ட "கிரேட் டிப்ரஷன்' (பண வாட்டம்) இழந்தவற்றை திரும்பப் பெற 25 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. அப்படி பார்க்கும் போது இந்த முறை உலக நாடுகள் மீண்டெழுந்தது ஒரு வருடத்திற்குள். ஆதலால், இந்த மீண்டெழுச்சியை பீனிக்ஸ் பறவை சாம்பலிலிருந்து உயிர்த்தெழுந்ததற்கு இணையாக ஒப்பிடுகின்றனர்.

இந்தியா ஏன் அதிகம் பாதிக்கப்படவில்லை?கடந்த ஆண்டு பொருளாதார சீர்குலைவோ அல்லது அதற்கு முன் ஏற்பட்ட ஆசிய பொருளாதார வீழ்ச்சியோ இந்தியாவை அதிகம் பாதிக்கவில்லை. காரணம், திறமையான நிர்வாகம். மேலும், உலகத்தின் பல பாகங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதைப் போல, பொருளாதார சீர்திருத்தங்களை பெரிய அளவில் இங்கு கொண்டு வராதது தான்.

உலகமெங்கும் வங்கிகளின் நிலைமை:உலகமெங்கும் வங்கிகள் இன்னும் மூழ்கிக் கொண்டிருக்கின்றன. அமெரிக்காவில் மட்டும் கடந்த ஆண்டு 25 வங்கிகளும், இந்த ஆண்டு 75 வங்கிகளுக்கும் மேல் மூழ்கி விட்டன. இந்திய வங்கிகள் நல்ல நிலையிலேயே இருக்கின்றன.இந்தியாவில் வங்கிகள் சமீபகாலத்தில் மூழ்கியதாக சரித்திரமே இல்லை. அப்படி மூழ்கும் நிலை வந்தாலும் அந்த வங்கியை நல்ல நிலையில் இருக்கும் வங்கியோடு இணைத்து, முதலீட்டாளர்களின் பணத்திற்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டு வந்திருக்கிறது. உதாரணம் நியூ பாங்க் ஆப் இந்தியா வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் இணைக்கப் பட்டது. தனியார் வங்கியான குளோபல் டிரஸ்ட் வங்கி, ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்சுடன் இணைக்கப்பட்டது. மகாராஷ்டிராவின் சாங்கில் வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியுடன் இணைக்கப்பட்டது.இந்திய வங்கிகளில், தனி நபர் ஒருவருக்கு, ஒரு வங்கியில் ஒரு லட்சம் ரூபாய் வரை தான் பணத்திற்கு காப்பீடு இருக்கிறது. ஏனெனில், வங்கிகளுக்கு ஏதாவது ஆகும் பட்சத்தில் அங்கு நீங்கள் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் போட்டிருந்தால் அந்த வங்கியை வேறு வங்கியுடன் இணைக்காத பட்சத்தில் ஒரு லட்சம் ரூபாய் வரை தான் திருப்ப கிடைக்கும். ஆனால், அது போல சந்தர்ப்பங்கள் சமீப காலங்களில் ஏற்படவேயில்லை என்பதால் பயம் ஏதும் தேவையில்லை.

இந்த நிகழ்வுகளில் கற்றுக் கொண்டது என்ன?சேமிப்பின் அவசியத்தைக் கற்றுக் கொண்டோம். சேமிக்காதவர்களுக்கு இது ஒரு பாடமாக இருந்தது. எல்லா சேமிப்பையும் ஒரே முதலீட்டில் போடக் கூடாது என்பதையும் கற்றுக் கொண்டோம்.ஆண்டாண்டு காலமாக தங்கம், வெள்ளியில் சேமித்து வந்திருக்கிறோம், அது எவ்வளவு உன்னதமானது என்று உலகத்திற்கு நாம் எடுத்துக் காட்டினோம். உலகமும் நம்மை பின்பற்றத் தொடங்கியது. ஆதலால், தங்கம், வெள்ளி தொடமுடியாத அளவிற்கு சென்று விட்டது.

துபாயில் என்ன நடந்தது?துபாய் அரசுக்கு சொந்தமான "துபாய் வேர்ல்ட்' என்ற நிறுவனம் தனது கட்டுமானப் பணிகளுக்காக பல நிறுவனங்களிடமிருந்து கடன்கள், வேலைகளை வாங்கியிருந்தது. அதில் 80 பில்லியன் டாலர் (3,70,000 கோடி) அளவு கடன்களை செலுத்த முடியாததால் அதை செலுத்துவதற்கு இன்னும் ஆறு மாத தவணை வேண்டும் என்ற கேட்டது உலகையை உலுக்கியது.ஏனெனில், உலகின் மிகவும் பணக்கார நாடுகளில் ஒன்றாக கருதப்பட்டது அரபு நாடுகள் தான். உலகின் பெரிய நாடுகளே தங்களுக்கு பிரச்னை ஏற்படும் போது அரபு நாடுகளை நாடுவது வழக்கம் (சிட்டி வங்கி தனக்கு பிரச்னை ஏற்பட்ட போது அரபு நாடுகளைத் தான் நாடியது). அவர்களுக்கே பிரச்னை என்றால் எங்கு செல்வார்கள்? அரசு வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் போனது உலகை ஒரு உலுக்கு உலுக்கியது. அதாவது தனி நபரோ அல்லது கம்பெனியோ கடன் வாங்கி கொடுக்க முடியாமல் போயிருந்தால் அது வேறு விஷயம். ஆனால், கடன் வாங்கியதோ துபாய் அரசு. அவர்களே கொடுக்க முடியாமல் போனால்?

துபாய் திரும்ப எழுமா?துபாய், உலகத்தின் வர்த்தக மையமாகவும் திகழ்கிறது. ஆதலால், துபாயின் பிரச்னையின் அளவு 80 பில்லியன் டாலர் என்றால், அதை தீர்ப்பது அவர்களுக்கு அவ்வளவு கடினமான காரியம் இல்லை. ஆனால், பிரச்னை இதை விட பெரிது என்றால், அது இந்தியாவை சிறிது பாதிக்கும் என்பதில் ஐயமில்லை.ஏனெனில், தற்போதே அங்கு கட்டட விலை மிகவும் குறைந்து விட்டது. இது தவிர வங்கிகள் இனி வீடுகள் வாங்கக் கடன் கொடுக்குமா என்பது யோசிக்க வேண்டும். ஆதலால், கட்டுமானப் பணிகள் குறையும் பட்சத்தில் அங்கு வேலை செய்யும் பல ஆயிரக்கணக்கான மக்கள் வேலை இழக்கும் அபாயம் உள்ளது.துபாயும் மற்ற நாடுகளைப் போல செலவுகளை குறைக்க முயற்சிக்கும். தற்போது துபாய் போன்ற நாடுகளில் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்களை தலைமைப் பதவிக்கு அமர்த்தி அழகு பார்ப்பதும் அவர்களுக்கு அளவுக்கு அதிகமாக சம்பளம் கொடுப்பதும் வாடிக்கை தான். இனிமேல் அது போன்ற பதவிகள் இந்தியர்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன

Sunday, November 29, 2009

Senthil Pandian

Hi da machi..
 
yesterday i had attended pandi's brother marriege. that time i met our old friend pandi and discussed our old memories.
 
The following matter to be published in our blog. and please find the attachment for your reference.
 
Luv karthik


செந்தில்பாண்டியன்

இந்த பெயர் சொன்னதும் யாருக்கும் அறிமுகம் தேவை இருக்காது. பஞ்சாயத்து ஸ்கூலில் இருந்து இராணி மெய்யம்மை வரை ஒன்றாக படித்தோம். பாண்டியை பற்றி தனிப்பட்ட முறையில் சில விசயங்களை பகிர்ந்து கொள்ளவே இந்த பதிப்பு. என் நினைவுகளை பின்னோக்கி பார்த்தால் அனேகமாக 4ம் கிளாஸில் இருந்து தான் ஞாபகம் வருகிறது. அப்பொழுது என்னுடன் சிலரையும் சேர்த்து பாண்டியின் அப்பாவிடம் ட்யூசன் சென்றோம். கண்டிப்புக்கு தர்மராஜ் வாத்தியார்தான் என்பது அனைவரும் அறிந்ததே. கணக்கு ஒழுங்கா போடலைன்னா தலையிலேயே குட்டுவார். அவர் கையெழுத்து முத்து முத்தாக இருக்கும். இதில் ஒரு ருசிகர தகவல் என்னவென்றால் என் அண்ணாவும் ஒரு காலத்தில் சில வருடங்கள் அவரிடம் ட்யூசன் படித்திருக்கிறார். குருனாதன் டீக்கடைக்கு பின்னால் இருந்தது அவர்களின் வீடு. அதற்கப்புறம் ஏ.வி.ராமசாமி வீட்டிற்கருகில் குடி வந்தனர். நானும் பாண்டியும், மணிராஜும் சைக்கிள் ஓட்டுவதில் அதிக ஆர்வம் காட்டி இருக்கிறோம். கிரஷர் தாண்டி மருந்து குடோன் வரைகூட தனியாக சென்றிருக்கிறோம். அந்த குடோனில் ஒரு மாமரம்கூட இருக்கும். அப்புறம் மைன்ஸ் வழியாக வந்து ஆஸ்பத்திரி வழியாக காலணி வருவோம். 9ம் கிளாஸ் படிக்கும் போது முழுப்பரீட்சை சமயம் பாண்டிக்கு அம்மை வந்து விட்டது. பாவம். ரொம்ப கஷடப்பட்டுதான் பரீட்சை எழுதினான். படிப்பில் எப்பொழுதும் தான் ஒரு சூரப்புலி என காட்டிக்கொண்டதில்லை. மனப்பாடம் செய்யும் வழக்கமும் அவனிடம் இல்லை. நான் 10வது படிக்கும்போது எனக்கு கணக்கு மட்டும் வராது. மற்ற எல்ல பாடங்களிலும் 50 மார்க்கை தாண்டும் நான் கணக்கில்மட்டும் 20க்கு மேல் போனதில்லை. அந்த சமயம் பாண்டி எனக்கு சில எளிய முறைகளில் பாடம் படிப்பது எப்படி என்று சொல்லிக்கொடுத்தான். படிப்பதை விட சொல்லிக்கொடுக்கும்பொழுது அதிகமாக நியாபகத்தில் இருக்கிறது என அவன் சொன்னது எனது நினைவில் இன்றும் இருக்கிறது. அந்த சமயங்களில் ஒரு நன்றியைக்குட சொல்லாத என்னிடமும் எதிர்பார்க்காத அவனிடமும் வெகுளித்தனமான ஒரு நட்பு இருந்தது. வகுப்பில் அவன் என்றுமே முதல் ரேங்க் வாங்கியது இல்லை. அனேகமாக அசோகன், சரவணன், சுதர்சனுக்கு பிறகு ஸ்ரீராமும் பாண்டியும் ரேங்க் எடுப்பர். நான் எப்பவுமே ரேங்க் எடுத்தது இல்லை. கடைசி ரிவிசன் டெஸ்ட்டில் கணக்கில் ஜஸ்ட் பாஸ் ஆனபோது 16வது ரேங்க் எடுத்து இருந்தேன். ஆனால் பப்ளிக் பரீட்சையில் கணக்கில் 70 மார்க் எடுத்தேன் எனப்து ருசிகர தகவல். வரலாறு பாடத்தில் 83 வரை எடுத்தேன். பத்தாவது முடித்தபின் எல்லோரும் பிரிந்தோம். பாண்டி மட்டும் திருச்சியில் ஈ.ஆரில் சேர்ந்தான். சரவணன் சோழவந்தான் போனான். நான் காரைக்குடி. இப்படி பிரிந்தாலும் லீவில் குவாரியில் சேர்ந்துவிடுவோம். பாண்டி மதுரை போன பின்புதான் நமக்குள் கேப் விழுந்து விட்டது. சென்னை போன பின்பு சுத்தமாக தொடர்பு விட்டுப்போனது. நான் கோவையில் கம்ப்யூட்டர் செண்டர் வைத்து இருந்தபோது ஒரு நாள் +2 ரிசல்ட் வந்த சமயம் இண்டர்னெட்டில் இவன் ஐ.ஏ.எஸ். பாஸ் செய்திருந்ததை பார்த்தேன். என் சந்தோசத்தை பகிர்ந்து கொள்ள என் அருகில் யாரும் இல்லை என்பது என் அன்றைய சோகம். அதற்கப்புறம் நீ...நீண்ட வருடங்களுக்குப்பின் நேற்று அவன் தம்பி கல்யாணத்தில் பார்த்தேன். முன்பை விட நல்ல உயரமாகி இருந்தான். முகம் அப்படியே இருந்தது. வாழ்க்கை என்பது இயந்திரகதி ஆகிவிட்ட நிலையில் இது போன்ற சந்திப்புகள் அளிக்கும் சந்தோஷம் மட்டுமே நமது நாட்களை உற்சாகமாக நகர்த்தும். தற்சமயம் டேராடூனில் இருப்பதாக சொன்னான். ரிஷிகேஷ் செல்லும் வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் அவனை சென்று பார்க்க இயலும். பாண்டியை பற்றி நினைக்கும்பொழுதெல்லாம் குணாவும் இரமேஷும் கூடவே வருகின்றனர். ஏன் என தெரியவில்லை. அருள் முருகனும் நினைவில் வந்து போகிறான். பாண்டியின் பையனை பார்த்தேன். வட்ட முகம். அகிலேஷ் என பெயர் வைத்து இருக்கிறான். அவன் அகிலத்தையே ஆள வேண்டும் என ஆண்டவனை வேண்டுகிறேன்.

நண்பர்களே.. கருத்துக்களை பகிர்வோமா??

மிக்க அன்புடன்
கார்த்திக்.

Saturday, November 28, 2009

வாசுகி முருகேசன் விபத்தில் மரணம்

அன்பு நண்பர்களே!

நேற்று கரூர் மாவட்ட முன்னாள் எம்.எல்.ஏ வும் இன்னாள் தி.மு.க மாவட்ட செயலாளருமான திருமதி. வாசுகி முருகேசன் அவர்கள் பல்லடம் அருகே சூலூரில் ஒரு வாகன விபத்தில் மரணமடைந்தார். அன்னாரது மறைவை ஒட்டி துணை முதல்வர் ஸ்டாலின் மற்றும் முக்கிய தி.மு.க நிர்வாகிகள் கரூர் வந்துள்ளனர். மாவட்ட தலை நகர் முழுவது அஞ்சலி செலுத்தும் வண்ணம் அனைத்து வர்த்தக நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன (உணவகங்கள் உள்பட). கட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் அடுத்த 3 நாட்களுக்கு தமிழகம் முழுவதும் நடக்காது என தலைமை அறிவித்துள்ளது. கட்சியின் ஒரே பெண் மாவட்ட செயலாளர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்னாராது ஆத்மா சாந்தி அடைய ஆண்டவனை வேண்டுவோம்.

Tuesday, November 10, 2009

Marriage Invitation - Bobby Prasath, Chettinad Cements.

Dear Senior Friends, I m stepping in to the married life, We Hearty welcome your valuable presence on the occasion, Pl. don't miss to attend my marriage, i m eagerly expecting U...............! 
 
 
Thanks & Regards,
 
BOBBY

Wednesday, October 28, 2009

உறவுகள் மேம்பட

உறவுகள் மேம்பட .....
குடும்பத்திலும் சரி அலுவலகத்திலும் சரி மனித உறவுகளில் விரிசல்கள் ஏற்படாமல் இருக்கவும், ஏற்பட்ட விரிசல்கள் மேலும் பெரிதாகாமல் இருக்க
 1. நானே பெரியவன் நானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள்.
 2.. அர்த்தமில்லாமலும் பின் விளைவு அறியாமலும் பேசிக் கொண்டிருப்பதை விடுங்கள்.
 3. எந்த விஷயத்தையும் பிரச்சனையையும் நாசுக்காக கையாளுங்கள், விட்டுக்கொடுங்கள்.
 4. சில நேரங்களில் சில சங்கடங்களை சகித்துத் தான் ஆகவேண்டும் என்று உணருங்கள்.
 
 5. நீங்கள் சொன்னதே சரி செய்ததே சரி என்று வாதாடாதீர்கள். குறுகிய மனப்பான்மையை விட்டொழியுங்கள்.
 
 6. உண்மை எது பொய் எது என்று விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கே சொல்வதையும் அங்கே கேட்டதை இங்கே சொல்வதையும் விடுங்கள்.
 
 7. மற்றவர்களை விட உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்து கர்வப்படாதீர்கள்.
 
 8. அளவுக்கதிகமாய், தேவைக்கதிகமாய் ஆசைப்படாதீர்கள்.
 
 9. எல்லோரிடத்திலும் எல்லா விஷயங்களையும், அவர்களுக்கு சம்பந்தம் உண்டோ, இல்லையோ சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்.
 
10. கேள்விப்படுகிற எல்லா விஷயங்களையும் நம்பிவிடாதீர்கள்.
 
11. அற்ப விஷயங்களைப் பெரிது படுத்தாதீர்கள்.
 
12. உங்கள் கருத்துக்களில் உடும்புப் பிடியாய் இல்லாமல், கொஞ்சம் தளர்த்திக் கொள்ளுங்கள்.
 
13. மற்றவர் கருத்துக்களில் செயல்களை நடக்கின்ற நிகழ்ச்சிகளைத் தவறாக புரிந்துக் கொள்ளாதீர்கள்.
 
14. மற்றவர்களுக்குரிய மரியாதை காட்டவும், இனிய இதமான சொற்களைப் பயன் படுத்தவும் தவறாதீர்கள்.
 
15. புன்முறுவல் காட்டவும் சிற்சில அன்புச் சொற்களைச் சொல்லவும் கூட நேரமில்லாதது போல் நடந்துக் கொள்ளாதீர்கள்.
 
16. பேச்சிலும் நடத்தையிலும் பண்பில்லாத வார்த்தைகளையும் தேவையில்லாத மிடுக்கையும் காட்டுவதைத் தவிர்த்து அடக்கத்தையும் பண்பையும் காட்டுங்கள்.
 
17. அவ்வப்போது நேரில் சந்தித்து மனம் திறந்து பேசுங்கள்.
 
18. பிரச்சனைகள் ஏற்படும் போது அடுத்தவர் முதலில் இறங்கி வரவேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சைத்துவக்க முன் வாருங்கள்.
                                                                          
                                                                                                                                                       
                                                                                                                               - தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி



sent By :Ramesh Kumar

Mathiyalagan






To view his blog CLICK HERE


-

காலத்தின் அருமை

காலத்தின் அருமை

மூன்று அமெரிக்கர்கள் இத்தாலி ரோம் நகர் வந்து போப் பாண்டவரைத் தரிசித்தனர். முதல் நபரைப் பார்த்து "நீங்கள் எவ்வளவு நாள் இத்தாலியில் தங்கப் போகிறீர்கள்" என்று கேட்டார் போப். "ஆறு மாதம்" என்று பதில் வந்தது. நீங்கள் இத்தாலியை அதிகமாகச் சுற்றி பார்க்க மாட்டீர்கள்முடியாது என்றார் போப். அடுத்தவர் பதறிப் போய் நான் மூன்று மாதம் தான் தங்கப் போகிறேன் என்றார். "நீங்கள் கொஞ்சம் பார்ப்பீர்கள்" என்றார் போப். பிறகு மூன்றாமவரைப் பார்த்து "நீங்கள் எவ்வளவு நாட்கள் தங்குவதாக எண்ணம் என்றதும், அவர் "ஒரு வாரம் தான் எனக்கு விடுமுறைஅதற்குள் நான் எப்படியாவது இத்தாலியைச் சுற்றிப் பார்க்கப் போகிறேன் என்று வருத்தம் தோய்ந்த குரலில் கூறினார்". போப்பாண்டவர் சிரித்தபடி "ஒரு வாரம் தான் என்றால் நீங்கள் கண்டிப்பாக இத்தாலி முழுவதையும் பார்த்து விடுவீர்கள்…" என்றார். பிறகு அவரே காரணமும் கூறினார். "நேரம் குறைவாக இருக்கிறது என்று கவலைப் படுகிறவர்கள் முழுமையாக அதனைப் பயன்படுத்துகிறார்கள். நிறைய நேரம் கைவசம் உள்ளவர்கள் நேரம் தான் இருக்கிறதே பிறகு பார்ப்போம் என்று எதையுமே முழுமையாகப் பாராது வீணாக்கி விடுகிறார்கள்" என்று அழகான விளக்கம் அளித்தார்.

"பிறகு", "பிறகு" என்று ஒத்தவைக்க நேரம் காலம் கைவசம் உள்ளவர்கள் நிகழ்காலத்தை நிராகரிக்கிறார்கள். எதிர்காலத்தைப் பாழாக்குகிறார்கள்.



Wednesday, October 21, 2009

தூரத்தில் இருக்கும் பக்கத்து வீடுகள்

தூரத்தில் இருக்கும் பக்கத்து வீடுகள்

ஹலோ ஃப்ரெண்ட்ஸ்.. எப்படி இருக்கீங்க? நலம்தானே? ரொம்ப நாள் ஆச்சு கடிதம் எழுதி. அதான்.. கிளம்பிட்டேன். ஒரு வித்யாசமாக இருக்கட்டுமே என்று இந்த கடிதத்திற்கு ஒரு தலைப்பு வைத்தேன். தலைப்பும் கூட மிக பொருத்தமாக அமைந்து விட்டது. தூரத்தில் இருக்கும் பக்கத்து வீடுகள்.. என் மனதில் எளிதில் தோன்றிய வாசகம்.

ஆலம்பாடி மைன்ஸ் போஸ்ட்.. அனேகமாக நம்மில் அனைவருக்கும் இது தான் ஆரம்ப விலாசம். (இப்ப இல்லை). நம்ம லைஃப்ல ஒரு ரீவைண்ட் பட்டன் இருந்த எவ்வளோ நல்லா இருக்கும். ஆனாலும் அந்த ரீவைண்ட் பட்டன் நம்ம மனசுக்கு இருக்கு. நான் சொல்வது சரிதானே? என் மனசில இருக்கும் பட்டனை நான் ஆன் பண்ணிட்டேன். கூடவே நீங்களும்தான்.

நால்ரோட்டில் இருக்கும் அந்த ஆர்ச்சை தாண்டி உள்ள வந்தா ஒரு 3 கி.மீ தூரத்தில ஒரு தனி உலகம். சீதை நகர்ன்னு பேர் இருந்தாலும் கூட குவாரிசைட்ன்னு சொன்னா பட்டுன்னு ஞாபகம் வந்துடும். இடையில உக்குவார்பட்டி, பண்டிதகாரனூர் பிரிவுன்னு ரெண்டு ஸ்டாப் வேற. அப்படியே பஸ் வந்து குவாரிக்குள்ளே வந்ததும் இருக்குற ரெண்டு யூனியன் ஆபீஸை சுத்தி வந்தா ஸ்டாப் வந்தாச்சு. (அந்த யூனியன் ஆபீஸில் எந்த ஒரு மீட்டிங்கும் நடந்ததா எனக்கும் நினைவில்லை). மொத்தம் 3 பில்டிங்ஸ் இருந்தாலும் 2 பில்டிங்தான் அதிக அளவில் நம்மால் கையாளப்பட்டிருந்தது. அப்படியே ஊருக்குள்ளே வந்தா சந்தைப்பேட்டை, ஊராட்சி ஒன்றிய பள்ளி, ஸ்டோர்கடை, டார்மெண்ட்ரி, கிளப் வளாகம்னு அப்படியே காலணி வந்துடும். அனேகமா சரவணன் வீடுதான் முதல்ல வரும். சுப்பன் வீடு அடுத்து.. இப்படி நம்ம உலகம் விரியும். 1985 ல இருந்து கொஞ்சம் பின்னோக்கி வருவோமா? இந்த டைம்ல ஒரு குரூப் புறத்தாக்குடில படிச்சிகிட்டு இருந்தப்போ ஒரு குரூப் குவாரி பஞ்சாயத்து ஸ்கூல்லயே படிச்சாங்க. ரெண்டாவது குரூப்தான் நான். செல்வபெருமாள் வாத்தியார், தர்மராஜ் வாத்தியார், கமலா டீச்சர் (மத்தவங்க பேரு மறந்து போச்சே) இப்படி எல்லாரும் ட்ரில் குடுத்து நம்ம ஆரம்ப லைஃப் இனிதே தொடங்கியது. ஸ்கூலுக்கு முன்னாடி ரெண்டு யூக்கலிப்டஸ் மரம் கூட இருக்கும். இப்ப இருக்கான்னு தெரியலை. அப்படி இப்படின்னு 5ம் கிளாஸ் தாண்டினதும் நம்ம இராணி மெய்யம்மை ஸ்கூல் லைஃப். கொஞ்சம் கார சாரமாத்தான் ஆரம்பிச்சது. முதல் மாற்றம் யூனிஃபார்ம் அடுத்தது உக்காரத்துக்கு பென்ச் சிஸ்டம். முதல்ல மஞ்சள் கலர் சட்டை. அப்புறம் பெரிய கட்டம் போட்ட சட்டை. அப்புறம் சின்ன கட்டம். இவ்வளோதான் ட்ரஸ் மாற்றங்கள். எக்ஸ்ட்ராவாக ஒரு டையும், ஷூவும். கவுண்டர் கடைல தான் எல்லா மிட்டாய் பர்ச்சேஸும். லேபிள் கலெக்சன் பண்றது பெரிய ஹாபி. நிறைய புத்தகங்கள், நோட்டுக்கள். எல்லாமே நமக்கு புதுசு. அதே மாதிரி டீச்சர்ன்னு கூப்பிட்டுகிட்ட இருந்த நாம மிஸ்ன்னு கூப்பிட ஆரம்பிச்சோம். ஆரம்பத்துல கிளப்ல நடந்துகிட்ட இருந்த ஸ்கூல் நான் ஏழாம் கிளாஸ் முடிக்கிற நேரத்தில புது கட்டடத்துக்கு மாற ஆரம்பிச்சது. இந்த பீரியட்ல மறக்க முடியாத வாத்தியார் வீரமலை. வாய்ப்பாடு ரவுண்ட் முடியறதுக்குள்ள அவனவனுக்கு ஒன்னுக்கு போயிடும். அடி பின்னிடுவார். காலைல அவர் டிவிஎஸ்ல ஸ்கூல் கிராஸ் பண்ணி எலிமெண்ட்ரி ஸ்கூல் போகும்போதே கலக்க ஆரம்பிச்சிடும். ஆனா அவர் போட்ட பிள்ளையார் சுழிதான் நம்ம எல்லாரையும் இன்னைக்கு நிமிர்ந்து உக்கார வைச்சிருக்கு. கோவிந்தசாமி வாத்தியாரை பற்றி நான் சொல்லவே தேவையில்லை. மினிமம் 4 குச்சி உடைச்சிட்டுதான் ஹிஸ்ட்ரியே ஆரம்பிப்பார். ஆனால் இன்னைக்கு யோசிச்சு பாத்தா ஹிஸ்ட்ரிக்கு இவ்வளோ அடி அதிகமோன்னு தோணுது.

வெள்ளிக்கிழமை இரவு வந்துட்டா எப்படிடா ஏமாத்திட்டு சினிமா பாக்குறதுன்னு ஒரு குரூப் டிஸ்கஸ் நடக்கும். நம்ம களவானித்தனமா யோசிக்கும்போது கோவிந்தசாமி வாத்தியார் நம்மளைவிட யோசிச்சு பிடிச்சிறுவார். முத்துலக்‌ஷ்மி டீச்சர், பாத்திமா, ரத்னா, கலவாதி, லலிதா மிஸ் இப்படி எல்லாருமே நாம நல்லா இருக்கனும்னு மனப்பூர்வமா நினைச்சு உழைச்சாங்க. அந்த வயசில நமக்கு வில்லனா தெரிஞ்ச அவுங்கள்ளாம் இப்ப நம்ம மனசில ஹீரோவாயிட்டாங்க. ராஜூன்னு ஒரு பி.டி.வாத்தியார் இருந்தார். அனேகமாக அவர்தான் நமக்கு சரிசமமாக பழகியவர். அப்புறம் தி கிரேட் புண்ணியமூர்த்தி வாத்தியார். எல்லருக்கும் இவர் பேர் தெரியாதுன்னு நினைக்கிறேன். தமிழ் அய்யான்னு சொன்னா போதுமே! இவர் கிளாஸ் ஜாலியா போகுமா.. இல்லை களேபரமான்னு யாரலையும் சொல்லவே முடியாது. அன்பு, அடி.. இவருக்கு மிஞ்சின ஆளு இல்லை. என் அண்ணா, நான், என் தம்பி என எலலாருக்கும் கிளாஸ் எடுத்தவர். போர்ட்ல ரொம்ப வேகமாக எழுதக்கூடியவர். ஓரளவுக்கு சோதிடமும் தெரிஞ்சவர்ன்னு ரொம்ப நாள் கழிச்சி நான் தெரிஞ்சிக்கிட்டேன். கடைசியா சௌந்தர்ராஜன்னு ஒரு பி,டி.வாத்தியார் இருந்தார். அவரும் நல்லவரே.

வாரத்தில் ஒரு சினிமா மட்டுமே சாத்தியம் என்று இருந்த நிலையில் கேபிள் டி.வி. கொண்டு வந்த மாற்றம் மிகப்பெரியது. முதலில் குண்டு செந்திலால் நிர்வகிக்கப்பட்ட கேபிள் பிறகு நாகராஜ் கையில் மாறியது. மதியம் 2 மணிக்கு ஒரு காட்சி. இரவு 8 மணிக்கு ஒரு காட்சி என சினிமா காண்பிக்கப்பட்டது. ஆனால் இந்த நிலை வெகு நாள் நீடிக்கவில்லை. 1994ல் வந்த சன் டிவி வாழ்க்கையையே புரட்டிப்போட்டது. ஆனால் சாயங்காலம் 6 முதல் இரவு 8 மணி வரை இருந்த டிவி வாழ்க்கையை ராஜ் டிவி (முதன் முதலில் 24 மணி நேர சேனல்) முற்றிலும் மாற்றியது. பிறகு வந்த விஜய், ஸ்டார், கே டிவி என சேனல்கள் கூடிக்கொண்டே போய் இப்ப அனேகமாக 21 தமிழ் சேனல்கள் தெரிகிறது.

ஸ்ரீராம் வீட்டு கொல்லையில் விளையாடப்பட்ட பேந்தா, அனல் வீட்டு சைட் ரோடில் கிரிக்கெட், செவன்ஸ்டோன், இராம்குமார் வீட்டு எதிரில் கிரிக்கெட், அனல் வீட்டு மாமர அடியில் அனிபுல், பல வீட்டு திண்ணையில் விளையாடப்பட்ட ரம்மி இப்படி நினைவில் நின்றவை நிறைய. இதையெல்லாம் விட சுவராசியமானது மீன் பிடித்தல். அதில் கருவாயன், ப்ளாக்கன் இருவரும் ஸ்பெசலிஸ்ட். அனேகமாக குவாரி பறவைகளான நாம் அனைவருமே தூண்டில் பிடித்து இருக்கிறோம். ஒரு முறை ஒரு செட்டாக மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது யாருக்குமே மீன் கிடைக்கவில்லை. அப்போது பைராம்கான் தான் ஏற்கனவே பிடித்து வைத்திருந்த மீனை யாருக்குமே தெரியாமல் மீண்டும் கொக்கியில் மாட்டி தண்ணியில் போட்டுவிட்டு பிறகு எல்லாரும் பார்க்கிறமாதிரி எடுத்த போது இருந்த மீனும் போய்விட்டது. இப்படி மறக்க இயலாத காமெடிகள் அதிகம்.

இப்படி அருகருகே இருந்த வீட்டு உறவுகள் இன்று எங்கு இருக்கிறோம் என்றே தெரியவில்லை. குறைந்த பட்சம் வருடத்திற்கு ஒருமுறை கூட சந்திக்க இயலாத நிலையில் ஒரு வாழ்க்கை. எல்லோரும் அவரவர் வாழ்க்கையில் தன்னிறைவை அடைந்து விட்டாலும் குவாரியில் கொண்டாடிய தீபாவளியை போல இன்னும் ஒருமுறை கொண்டாட முடியாதா என மனம் ஏங்குவதை அறிய முடிகிறது. 100 ரூபாய்க்கு குஜிலியம்பாறையில் பட்டாசு வாங்கி ஒரு கூடை நிறைய என் அண்ணா கொண்டுவந்தது இன்னும் என் நினைவில் இருக்கிறது. ஆனால் இன்று 1000 ரூபாய் கொடுத்தாலும் கூட ஓலை பட்டாசு வாங்க முடிவது இல்லை. தீபாவளி என்றதும் ஸ்ரீராம் நினைவில் வந்து போகிறான்.

இரவு நேரங்களில் செந்திலுடன் சேர்ந்து கொண்டு ஏர்கன்னில் மைனா சுட்டது, அரை பரீட்சை லீவில் பொன் வண்டு பிடித்து முட்டை போட வைத்தது, கோவிந்தசாமி வாத்தியார் வீட்டு நைட் ஸ்டடி, வாலிபால் விளையாட்டுக்கள், தீபாவளிக்கு ஊர் சுற்றல் என மனதில் மட்டுமே நினைவில் வாழ்கிற பல விசயங்கள். அந்த சமயம் நம்மில் யாரிடமும் காமிரா இல்லாததால் விட்டுப்போன காட்சிகள் பல.
குறைந்த பட்சம் நமது இணையதளத்தில் பகிர்ந்துகொள்ளப்படும் புகைப்படங்கள் ஆறுதல் அளிப்பவை. நண்பர்களே! இன்னும் நிறைய படங்களையும் நினைவுகளையும் பகிர்ந்துகொள்வோம். வாரம் ஒருமுறையாவது குறைந்த பட்சம் இணையத்தில் கருத்துப்பரிமாற்றத்தை கண்டிப்பாக மேற்கொள்வோம் என உறுதி எடுப்போம். நம் சக்திக்கு மீறி நாம் பிரிக்கப்பட்டுவிட்டோம். ஆனால் நம் சக்திக்குட்பட்ட இணையத்தில் ஒன்றிணைவோம்.

வாழ்க வளமுடன்.

மிக்க அன்புடன்.
கார்த்திகேயன்.

Saturday, October 17, 2009

தீபாவ‌ளி - வாழ்த்துக்க‌ள்

அனைவ‌ருக்கும் தீபாவ‌ளி ந‌ல்வாழ்த்துக்க‌ள்!!!

Thursday, October 8, 2009

Ramasubramani



Hi guys... Today i met our old chap Ramasubramani everloving guy at my office. Just he return back from dubai. Shared lot of sweet memories and updated so many things.. you can get him thru mail (subbs99us@yahoo.com / r.subramanian99@gmail.com) and his mobile number was 9952288323. Soon he will be with us in this blog. advance diwali wishes...
luv karthik.

Saturday, October 3, 2009