Saturday, July 24, 2010

முதல் நடிப்பும் முதல் இயக்கமும்

முதல் படங்கள்:
எம்ஜிஆர் - சதிலீலாவதி
சிவாஜி - பராசக்தி
ரஜினிகாந்த் - அபூர்வ ராகங்கள்
கமலகாசன் - களத்தூர் கண்ணம்மா
ஜெயலலிதா - வெண்ணிற ஆடை
விஜயகாந்த் - தூரத்து இடிமுழக்கம்
சத்யராஜ் - சட்டம் என் கையில்
சரத்குமார் - புலன் விசாரணை
கவுண்டமனி - 16 வயதினிலே
மோகன் - நெஞ்சத்தை கிள்ளாதே
விஜய் - நாளைய தீர்ப்பு
அஜீத் - அமராவதி
ப்ரசாந்த் - வைகாசி பொறந்தாச்சு
த்ரிஷா - லேசா லேசா
சூர்யா - நேருக்கு நேர்
விக்ரம் - மீரா
பிரபு - சங்கிலி
கார்த்திக் - அலைகள் ஓய்வதில்லை
பாண்டியன் - மண் வாசனை
பாண்டியராஜன் - ஆன் பாவம்
விவேக் - மனதில் உறுதி வேண்டும்
ராதிகா - கிழக்கே போகும் ரயில்
பாக்யராஜ் - புதிய வார்ப்புகள்
ரகுவரன் - ஏழாவது மனிதன்

இயக்கம்:

பி. வாசு - பன்னீர் புஷ்பங்கள்
இராம. நாராயணன் - சுமை
வீ.சேகர் - நீங்களும் ஹீரோதான்
கே.எஸ்.ரவிக்குமார் - புரியாத புதிர்
மணிரத்னம் - பல்லவி அனுபல்லவி (கன்னடம்)
பகல் நிலவு (தமிழ்)
பாலு மகேந்திரா - அழியாத கோலங்கள்
ஷங்கர் - ஜெண்டில்மேன்
பாண்டியராஜன் - கன்னி ராசி
பாக்யராஜ் - சுவரில்லா சித்திரங்கள்
பாலச்சந்தர் - நீர்க்குமிழி

Monday, July 19, 2010

மதராசப்பட்டிணம் - விமர்சனம்

கொஞ்சம் லகான், கொஞ்சம் நாடோடி தென்றல்.. நிறைய டைட்டானிக்கை கலந்து கொடுத்து இருக்கிறார்கள் மதராசபட்டிணமாக. மலையாள மண்ணில் இருந்து வந்த சிறந்த நடிகரான ஹனீபாவின் கடைசி படம். மனிதர் அற்புதமாக நடித்துக்கொடுத்திருக்கிறார். 1945 மதராஸ் ஸ்டேட்டின் கூவம் நதிதான் கதைக்களம். அற்புதமான ஆறாக இருந்திருக்கிறது. 1945ல் மாகாண கவர்னரின் மகளாக வரும் கதா நாயகிக்கும் வண்ணாந்துறையில் வாழும் கதா நாயகனுக்கும் மலர்ந்த காதலே கதை. சுதந்திரம் வாங்கியவுடன் பிரிய வேண்டிய நிலை. காதலின் கதி என்ன என்பதே கதை. பழைய மெட்ராஸை கண்முன் கொண்டுவந்த ஆர்ட் டைரக்டரின் பங்குதான் இதில் மெச்சப்பட வேண்டியது. அற்புத உழைப்பு தெரிகிறது. கதா நாயகியாக எமியும் நாயகனாக ஆரியாவும். மனிதர் நல்ல உடல்வாகு. குஸ்தி வீரனாகவும் வண்னானாகவும் பரிமளிக்கிறார். பயம் கிலோ எவ்வளவு என கேட்கும் அளவிற்கு கண்களில் ஒரு கூர்மை. ஆரியாவின் சினிமா வாழ்க்கையில் இப்படம் ஒரு மைல் கல். சிற்சில முரண்பாடுகள் இருந்தாலும் பார்க்கவேண்டிய படம்தான் இது.

ஆரியாவின் பரம்பரை வீட்டுத்தாலியை எமியிடம் கொடுத்து தைரியமாக போய்வா.. வாழ்வோ சாவோ உனக்கு இந்த மண்ணில்தான் என சொல்லி அனுப்புகிறார். விதி அவர்களை பிரித்துவிட அந்த தாலியை கொடுப்பதற்காக 2010ல் ஆரியாவை தேடி சென்னை வருகிறார் எமி. 30 கோடி பேரில் தொலைத்த ஒருவனை 110 கோடியில் தேட வேண்டிய கட்டாயம். கண்டுபிடிக்கும் நேரத்தில் ஆரியா உயிருடன் இல்லை. எனினும் எமியின் கனவுகள் அனைத்தையும் ஆரியா நிறைவேற்றி இருப்பதும், எமிக்காகவே திருமணம் செய்யாமல் வாழ்ந்ததையும் கண்டு எமி அந்த தாலி எனக்குத்தான் என எண்ணும் சமயம் ஆரியாவின் கல்லறையில் எமியின் உயிர் பிறிகிறது.

எந்த ஒரு திரைப்படத்திலும் பார்க்காத கிளைமாக்ஸ் விஷுவல் இதில். திரையில் படம் எதும் வராமல் வெறும் டயலாக்கில் நகர்த்தி இருப்பது புதுமை. அதே போல் ஆரியா ஆங்கிலம் கற்றுக்கொள்ளும் வேகத்தைவிட எமி தமிழ் கற்றுக்கொண்ட வேகம் அருமை. எமிக்கு தமிழ் தெரியாது என நினைத்து 2010 தமிழர்கள் கிண்டல் அடிப்பது.. முடிவில் தெரிய வரும்போது நெகிழ்வது எல்லம் சூப்பர். அழகு தேவதையாக எமி. எத்தனை பேர் தூக்கத்தை கெடுத்தாரோ?

நாசர், ஆரியாவின் நண்பர்களாக வரும் அந்த நால்வர், போலீஸ் அதிகாரியாக வரும் ஆங்கிலேயர் என எல்லோரும் அற்புதமாக நடித்திருக்கின்றனர். 1945ல் பிரிந்து போன காதலர்கள் அதற்கப்புறம் ஒருவரை ஒருவர் தேடவில்லை என்பதுதான் பெரிய நெருடல். ஆரியா மிகப்பெரிய மனிதராகவிட்டபோதும் லண்டன் போய் காதலியை பார்க்காமல் அவருக்காகவே வாழ்ந்திருப்பதாக காட்டி இருப்பதும் இடிக்கிறது. கூவம் ஆற்றில் பாலத்தின்கீழ் ஆரியாவை பிரிந்த எமி கிழவியான பிறகு அதே ஆற்றின் பாலத்தின் அருகில் நிற்கும் போது மூக்கை பொத்திக்கொள்ளும் அளவிற்கு நாறி இருக்கிறது. எந்த அளவிற்கு நகரம் பாழ்பட்டுவிட்டது என்பதை அழகாக சொல்லி இருக்கிறார் இயக்குனர். பாடல்கள் சுமார் ரகம்.

அனைவரும் ஒருமுறை பார்க்கவேண்டிய படம் மதராசப்பட்டிணம்.

Friday, July 16, 2010

பாபி Prasath

hi anna
           how r u .Atpresent am in UK.This is my new mail ID.kindly inform to our friends.
 
Regards
 
Bobby Prasath.N

Tuesday, July 13, 2010

கண்ணதாசன் ஒரு சகாப்தம்

கண்ணதாசன் என்றால் கண்ணனுக்கு தாசன் என்று அர்த்தம் அல்ல. `அழகான கண்களைப்பற்றி வர்ணிப்பதிலும், வர்ணிக்கப்பட்டதைப் படப்பதிலும் ஆசை அதிகம். அதனால் இந்தப் பெயரை வைத்துக்கொண்டேன்’ என்பது அவரே அளித்த விளக்கம். பெற்றோர் வைத்த பெயர் முத்தையா.

மக்களுக்குப் புரியாத வார்த்தைகளில் பாட்டெழுதி அவர்களை மலைக்க வைத்து வாய் பிளக்க வைப்பதுதான் நல்ல கவிஞனுக்கு அடையாளம் என்று பலரும் எண்ணி எழுதிக் கொண்டிருந்த சூழலில் , மலைக்க வைத்த கவிதைகளை மக்களுக்குப் புரிந்த வார்த்தைகளில் சொல்லி அவர்களையும் ரசிக்க வைப்பதில் மகுடம் சூடிய கவிஞன் கவியரசு கண்ணதாசன் .

` சிறு வயதில் இன்னொரு குடும்பத்துக்கு 7,000 ரூபாய்க்குத் தத்துக் கொடுக்கப்பட்டவர் கண்ணதாசன். அந்த வீட்டில் அவர் பெயர், நாராயணன்.

`கலங்காதிரு மனமே, உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே’ என்று `கன்னியின் காதலியில்’ எழுதியது முதல் பாட்டு. மூன்றாம் பிறையில் வந்த, `கண்ணே கலைமானே’ கவிஞரின் கடைசிப் பாட்டு.

எப்போதும் மஞ்சள் பட்டுச் சட்டை, வேட்டி அணிந்திருப்பார். திடீரென்று கழுத்து, கைகளில் நகைகள் மின்னும் திடீரென்று காணாமல் போய்விடும். `பள்ளிக்கூடத்துக்குப் போயிருக்கு’ என்று அவை அடகுவைக்கப்பட்டு இருப்பதைச் சொல்வார்.

`மயிலாப்பூர் உட்லண்ட்ஸ் ஹோட்டல், அபிராமபுரம் கவிதா ஹோட்டல் இரண்டும் தான் கவிஞருக்குப் பிடித்த இடங்கள். பெரும்பாலான பாடல்கள் பிறந்தது இங்குதான். வெளியூர் என்றால் பெங்களூர் உட்லண்ட்ஸ்.

வேட்டியின் ஓரத்தைப் பிடித்துக்கொண்டு அறைக்குள் நடந்தபடி பாடல்களின் வரிகளைச் சொல்வார். நடந்துகொண்டே இருந்தால்தான் சிந்தனை துளிர்க்கும். கவிதைவரிகள் சொல்லும்போது செருப்பு அணிய மாட்டார்!

`கொஞ்சம் மது அருந்திவிட்டால், என் சிந்தனைகள் சுறுசுறுப்படைவது வழக்கம். அதைப்போல் இன்ப விளையாட்டில் எனக்கு ஆசை உண்டென்றாலும், சிந்திக்கிற நேரத்தில் ரதியே வந்தாலும் திரும்பி பார்க்க மாட்டேன்’ என்பது கவிஞரின் வாக்குமூலம்.

’முத்தான முத்தல்லவோ’ பாட்டைத்தான் மிகக் குறைவான நேரத்துக்குள் (10 நிமிடங்கள்) எழுதி முடித்தார். அதிக நாட்களுக்கு அவரால் முடிக்க முடியாமல் இழுத்தது. `நெஞ்சம் மறப்பதில்லை... அது நினைவை இழப்பதில்லை!’’

கண்ணதாசன் அடிக்கடி கேட்கும் பாடல், `திருப்பாற்கடலில் பள்ளிக்கொண்டாயே ஸ்ரீமன் நாராயணா,’ தனக்குப்பிடித்த பாடல்களாக, `என்னடா பொல்லாத வாழ்க்கை,’’ `சம்சாரம் என்பது வீணை’’ ஆகிய இரண்டையும் சொல்லியிருக்கிறார்.

கண்ணதாசனுக்குப் பிடித்த இலக்கியம் கம்பராமாயணம்,`நான் பாடல் இயற்றும் சக்தியைப் பெற்றதே அதில் இருந்ததுதான்’ ’என்பார்.
காமராசர் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக எடுக்க விரும்பினார். சில காட்சிகளையும் எடுத்தார். ஆனால் முற்றுப்பெறவில்லை!

ஆரம்ப காலத்தில் வேலை எதுவும் கிடைக்காததால், சந்திரமோகன் என்று பெயர் மாற்றிக்கொண்டு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்டிருக்கிறார். பிற்காலத்தி; `பராசக்தி’,’`ரத்தத்திலகம்’’,`கறுப்புப்பணம்’,’ `சூரியகாந்தி’.’ உள்ளிட்ட படங்களில் நடித்தும் இருக்கிறார்.

முதல் மனைவி பெயர் பொன்னம்மா,அடுத்த ஆண்டே பார்வதி என்பவரை இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்குத் தலா ஏழு குழந்தைகள். 50-வது வய்தில் வள்ளியம்மையைத் திருமணம் செய்தார். இவர்களுக்குப் பிறந்தவர்தான் விசாலி. மொத்தம் 15 பிள்ளைகள்!

படுக்கை அறையில் வைத்திருந்த ஒரே படம் கிருஷ்ணர். வெளிநாடு போவதாக இருந்தால், சாண்டோ சின்னப்பா தேவர் வீட்டுக்குப் போய், அவர் பூஜை அறையில் இருக்கும் முருகனை வணங்கிவிட்டுத்தான் செல்வார்!

`கண்ணதாசன் இறந்துவிட்டார்’’ என்று இவரே பலருக்கும் போன் போட்டு வதந்தியைக் கிளப்பி, வீடு தேடிப் பலரும் அழுது கூடிவிட, பிறகு இவரே முன்னால் தோன்றிச் சிரித்த சம்பவம் நடந்திருக்கிறது.

`உங்கள் புத்தங்கள் அனைத்தையும் படிக்கும் ஒருவனுக்கு உங்களது புத்திமதி என்ன? என்று கேட்டபோது, அவர் சொன்ன பதில்... புத்தங்களைப் பின்பற்றுங்கள். அதன் ஆசிரியரைப் பின்பற்றாதீர்கள்!’

தன்னுடைய பலவீனங்களை வெளிப்படையாக ஒப்புக்கொண்டு சுயவரலாறு எழுதியவர்,`வனவாசம்,மனவாசம் இரண்டும் ஒருவன் எப்படி வாழக்கூடாது என்பதற்கான உதாரணங்கள்’ என்றார்.

காமராசர், அண்ணா, எம்.ஜி.ஆர்,கருணாநிதி ஆகிய நான்கு பேரையும் அதிகமாகப் பாராட்டியவரும், திட்டியவரும் இவரே! ஈ.வெ.கி.சம்பத்.ஜெயகாந்தன்,சோ,பழ.நெடுமாறன் ஆகிய நான்கு பேரும் அரசியல் ரீதியாக நெருக்கமான நண்பர்கள். `கவிஞரின் தோரணையை விட அரசனின் தோரணைதான் கவிஞரிடம் இருக்கும்’ என்பார் ஜெயகாந்தன்.

திருமகள், திரையொலி, மேதாவி, சண்டமாருதம் ஆகியவை இவர் வேலை பார்த்த பத்திரிகைகள், தென்றல், தென்றல்திரை, முல்லை, கடிதம்,கண்ணதாசன் ஆகியவை இவரே நடத்தியவை.

திருக்கோஷ்டியூர் தொகுதியில் முதல் தடவை நின்றார். தோற்றார். அதன் பிறகு தேர்தலில் நிற்கவே இல்லை.`இது எனக்குச் சரிவராது’’ என்றார்.

`குடிப்பதும், தவறுக்கென்றே தங்களை ஒப்புக்கொடுத்துவிட்ட பெண்களுடன் ஈடுபடுவதும், ஒரு தனி மனிதன் தன் உடல்நிலைக்கும் வசதிக்கும் ஏற்ப செய்யும் தவறுகளே தவிர, அதனால் சமுதாயத்தின் எந்த அங்கமும் பாதிக்கப்படுவதில்லை’ என்று தனது தவறுகளுக்கு வெளிப்படையான விளக்கம் அளித்து உள்ளார்.

`பிர்லாவைப்போலச் சம்பாதித்து ஊதாரியைப்போலச் செலவழித்து, பல நேரங்களில் பிச்சைக்காரனைப் போல ஏங்கி நிற்கும் வாழ்க்கைதான் என்னுடையது’ என்பது அவர் அளித்த வாக்குமூலம்.

தான் வழக்கமாகப் படுத்துறங்கும் கருங்காலி மரத்தில் செய்யப்பட்ட கட்டிலுடன் தன்னை எரிக்க வேண்டும் என்பது கண்ணதாசனின் கடைசி விருப்பம்!

`அச்சம் என்பது மடமையடா,’ `சரவணப் பொய்கையில் நீராடி,’ `மலர்ந்தும் மலராத...,’ `போனால் போகட்டும் போடா..,’ `கொடி அசைந்ததும்,’ `உன்னைச் சொல்லிக் குற்றமில்லை,’ `கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும்,’ `எங்கிருந்தாலும் வாழ்க,’ `அதோ அந்தப் பறவைபோல வாழவேண்டும்,’ `சட்டி சுட்டதடா கை விட்டதடா..., ஆகிய 10 பாடல்களும் தமிழ் வாழும் காலம் முழுவதும் இருக்கும் காவியங்கள்
இறப்புக்கு 11 ஆண்டுகளுக்கு முன்பே தனக்குத்தானே இரங்கற்பா எழுதிவைத்துக்கொண்டார். அதன் கடைசி வரி இப்படி முடியும்...

`ஏற்றிய செந்தீயே நீ எரிவதிலும்
அவன் பாட்டை எழுந்து பாடு!

Friday, July 2, 2010

சில சினிமா செய்திகள்

கமல்ஹாசனின் சகோதரர் சாருஹாசன் நடித்த முதல் திரைப்படம் "உதிரிப் பூக்கள்"

* "மழலைப் பட்டாளம்" என்ற திரைப்படத்தை இயக்கியவர் நடிகை லட்சுமி

* இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகரின் முதல் திரைப்படம் "அவள் ஒரு பச்சைக் குழந்தை"

* நடிகர் சிவக்குமார் நடித்த முதல் திரைப்படம் "காக்கும் கரங்கள்". அவரது நூறாவது திரைப்படம் "ரோசாப்பூ ரவிக்கைக்காரி"

* புரட்சிக்கவிஞர் பாரதிதாசனார் வசனம் மற்றும் பாடல்கள் எழுதிய திரைப்படம் "வளையாபதி"

* திரையுலகில் சிவாஜி கணேசன் பேசிய முதல் வசனம் "சக்சஸ்... வெற்றி!"

* இயக்குனர் பாரதிராஜா கதாநாயகனாக நடித்த திரைப்படம் "கல்லுக்குள் ஈரம்"

* நகைச்சுவை நடிகர் கவுண்டமணி கதாநாயகனாக நடித்த திரைப்படம் "பணம் பத்தும் செய்யும்"

* குணச்சித்திர நடிகை வடிவுக்கரசி தெலுங்குப் படங்களில் சிவரஞ்சனி என்ற பெயரிலும், மலையாளப் படங்களில் கவுரி என்ற பெயரிலும் நடித்து வந்தார்.

* ரஜினிகாந்துக்கு பிடித்த தமிழ் நடிகை லட்சுமி. இந்தி நடிகை ஷர்மிளா தாகூர். சூப்பர் ஸ்டாருக்கு பிடித்த பின்னணி பாடகர் சந்திரபாபு.

* நடிகை சவுகார் ஜானகி தயாரித்த முதல் திரைப்படம் காவியத்தலைவி. கே. பாலச்சந்தர் இயக்கினார்.

* நடிகை பத்மினி தொடர்ச்சியாக 30 வருடங்கள் நடித்தார். சாவித்திரி 28 வருடங்கள் நடித்தார்.

* மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன் ஜோடியாக சரோஜாதேவி 24 படங்கள் நடித்தார். ஜெயலலிதா 28 படங்கள் நடித்தார்.

* அம்மா என்ற திரைப்படத்துக்கு எழுத்தாளர் சாண்டில்யன் வசனம் எழுதியிருக்கிறார்.

* 1932ல் வெளியான "இந்திர சபா" திரைப்படத்தில் மொத்தம் 72 பாடல்கள்.

* சினிமாவுக்கென வெளியான முதல் பத்திரிகை மூவி மிர்ரர் 1927ல் தொடங்கப்பட்டது.

* தமிழ் சினிமாவின் முதல் இரட்டைவேட திரைப்படம், சிவாஜி கணேசன் நடித்த "உத்தம புத்திரன்"

* தமிழில் வெளிவந்த முதல் யதார்த்த கலைப்படம் "ஏழை படும் பாடு"

* கமல்ஹாசனுக்கு பிடித்த விளையாட்டு கிரிக்கெட். பிடித்த விளையாட்டு வீரர் சுனில் கவாஸ்கர்.

* கல்யாணம் பண்ணிப்பார், செல்லப்பிள்ளை இரு படங்களில் மட்டுமே சாவித்திரி வில்லியாக நடித்தார்.

* 1936ல் திரையுலகத்துக்கு அறிமுகமான எம்.ஜி.ஆர் 1977 வரை தொடர்ச்சியாக 41 ஆண்டுகள் திரையுலகில் பணியாற்றினார்.

* ரயில்வேயில் பணிபுரிந்து கொண்டிருந்த நாகேஷ் அப்பணியை ராஜினாமா செய்துவிட்டே திரையுலகில் நுழைந்தார்.

* தமிழில் "வயது வந்தவர்களுக்கு மட்டும்" சான்றிதழ் பெற்ற முதல் திரைப்படம் எம்.ஜி.ஆர் நடித்த "மர்மயோகி". எம்.ஜி.ஆர் நடித்த 136 திரைப்படங்களில் இரண்டு படங்களுக்கு மட்டுமே இச்சான்றிதழ் கிடைத்தது.

* முழுக்க எடுக்கப்பட்டு தீயிலே நாசமான தமிழ் திரைப்படம் "இன்பசாகரன்"

* தி. ஜானகிராமன் எழுதிய "அம்மா வந்தாள்", "மரப்பசு" ஆகிய இரு நாவல்களும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு மிகவும் பிடித்தமானவை.

* ஏதாவது ஒரு விருது வாங்க டெல்லிக்கு தொடர்ச்சியாக 11 வருடங்கள் சென்று வந்தவர் நடிகை சாவித்திரி

* தமிழ் திரைப்பட வரலாற்றில் முதல் மக்கள் தொடர்பாளராக பணியாற்றியவர் பிலிம் நியூஸ் ஆனந்தன். திரைப்படம் இயக்குனர் ஸ்ரீதரின் தேனிலவு.

* நடிகர் சத்யராஜ் ஒரு திரைப்படத்துக்கு கதை எழுதி இருக்கிறார். அத்திரைப்படத்தின் பெயர் சுயரூபம்.

* கமல்ஹாசன் அரங்கேற்றம் திரைப்படத்தில் நடித்தபோது அவருக்கு வழங்கப்பட்ட சம்பளம் ரூ.300/-

* கதாநாயகன் இல்லாமல் எடுக்கப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் "அவ்வையார்

* 1953ல் வெளியான "திரும்பிப் பார்" திரைப்படத்தில் வில்லனாக சிவாஜி கணேசன் நடித்தார். அந்த வருடத்தின் சிறந்த வில்லனாக ஒரு பத்திரிகையாளரால் தேர்ந்தெடுக்கப்பட்டார் சிவாஜி.

* "சண்டிராணி" என்ற திரைப்படத்தின் திரைக்கதையையும், வசனத்தையும் எழுதியவர் பானுமதி.

* தயாரிப்பாளர் உட்பட முழுக்க முழுக்க புதுமுகங்களால் உருவாக்கப்பட்ட "ஒரு தலை ராகம்" 33 வாரங்கள் ஓடி அபார சாதனை புரிந்தது

* துளசி, வண்ணக் கனவுகள், அடிமை விலங்கு, நாற்காலி கனவுகள் ஆகிய திரைப்படங்களுக்கு கவிஞர் வைரமுத்து வசனம் எழுதியிருக்கிறார்.

* நடிக-நடிகையருக்கு மேக்கப் போடாமல் எடுக்கப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் வீணை எஸ். பாலச்சந்தர் இயக்கிய "ஓடாதே நில்"

* நடிகர் திலகம் நடித்த கதாபாத்திரங்களிலேயே அவருக்கு பிடித்தது தில்லானா மோகனாம்பாளின் சிக்கல் சண்முகசுந்தரம்.

* வட்டாரத் தமிழ் மொழியில் வசனம் எழுதப்பட்டு வெளிவந்த முதல் திரைப்படம் "மக்களைப் பெற்ற மகராசி"

* நிஜ தம்பதியரான கலைவாணர் என்.எஸ்.கே - மதுரம் தம்பதி, மொத்தம் 75 படங்களில் ஜோடியாக நடித்திருக்கிறார்கள்.

* ஜெமினி கணேசன் நடித்த வஞ்சிக்கோட்டை வாலிபன் ஜெமினி பிக்சர்ஸ் அதிபர் எஸ்.எஸ். வாசனால் இயக்கப்பட்டது.


* 1959ல் தென்னிந்திய நடிகர் சங்கம் உருவானது. சங்கத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தலைவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.