Saturday, January 12, 2013

பொங்கல் நல்வாழ்த்துக்கள்



2013ம் ஆண்டின் பொங்கல் வந்துவிட்டது. நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்த வருடம் ரேஷனில் ஒரு கிலோ அரிசியும் ஒரு கிலோ சர்க்கரையும் கூடுதலாக 100 ரூபாய் பணமும் கொடுத்திருக்கிறது தமிழக அரசு. எனக்கு ஒன்று புரியவில்லை. பொங்கலுக்கு வெல்லம்தானே வேண்டும். மேலும் முந்திரி, திராட்சை வாங்கிக்கொள்ள வசதியாக 100 ரூபாய் தந்திருப்பதாக சொல்கிறார்கள். ஆனால் அந்த பணம் டாஸ்மாக் மூலமாக கஜானாவிற்கே சென்று கொண்டிருக்கிறது. சும்மா சொல்லனும்னு நினைச்சேன். ஆட்டோ அனுப்பிறாந்தீங்கப்பா… தாங்காது.