Saturday, March 29, 2014

குக்கூ - நல்ல படம்


நல்ல படம் வந்தால் கண்டிப்பாக எல்லாருக்கும் சொல்லனும். இந்த படம் ரொம்ப நல்ல படம். தேசிய விருதுகளுக்கு தகுதியான படம். படத்தில் நாயகனும் நாயகியும் கண் தெரியாதவர்களாக நடித்திருக்கிறார்கள். அவர்கள் நடித்திருக்கிறார்கள் என்பதை யாரேனும் நமக்கு சொன்னால்தான் அவர்கள் பார்வையுள்ளவர்கள் என நாம் உணர்கிறோம். அந்த அளவிற்கு சிறந்த நடிப்பினை வெளிக்கொணர்ந்துள்ளனர்.

மொத்தத்தில் பார்வையற்றவர்களின் பார்வையில் விரியும் காதல் கதையினை பார்க்கும் வண்ணம் நமக்களித்த இயக்குனருக்கும் அந்த படத்தில் பணியாற்றிய தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் நடிக நடிகைகளுக்கும் பாராட்டுக்கள்.

சீக்கிரம் இந்த படத்தை தியேட்டரில் பார்த்துவிடுங்கள். காலம் தவறி டிவியில் பார்த்தால் அதன் தரம் உணர இயலாது.

Tuesday, March 18, 2014

ஜய வருடம் எப்படி இருக்கும்?


ஆற்காடு சீதாராமய்யர் சுத்த வாக்கியப்படி கணிதம் செய்து
கண்டு கீழ்கண்ட பலன்கள் தரப்பட்டுள்ளன.

மங்களகரமான ஜய வருடம் நவக்கிரக ஆதிபத்யங்களில் இராஜா – சந்திரன், மந்திரி – சந்திரன், அர்க்காதிபதி – சூரியன், மேகாதிபதி – சூரியன், ஸஸ்யாதிபதி – குரு, சேனாதிபதி – சூரியன், இரஸாதிபதி – சனி, தான்யாதிபதி – செவ்வாய், நீரஸாதிபதி – புதன், பசு நாயகர் – கோபாலன், வருஷ தேவதை – சாத்தான் (துர் தேவதை) இராஜ கிரகமாகிய உச்சம் பலம் பெற்ற சூரியனுக்கு வர்கோத்திர யோகமும், மூன்று முக்கிய ஆதிபத்தியம் வருவதும் இந்த ஜய வருடம் திங்கள் கிழமை சுக்லபஷம் சதுர்தசி திதி அஸ்தம் நட்சத்திரம் 2ம் பாதம் வியாகாந்தம் நாமயோகம் வணஜீ நாமகரணம் சித்த யோகம் கூடிய நன்னாளில் காலை 06:05 மணிக்கு இராஜஸ மேஷம் லக்கினத்தில் கன்னி ராசியில் சந்திர ஓரையில் ஜெகத் உலக ஜாதகத்திற்கு சந்திரன் மகா தசை, ராகு புத்தி, செவ்வாய் அந்தரம் நடப்பதும் வர்க்கோத்திர யோகமும் சந்திர மங்கள யோகமும் உலகத்திற்கு ஏழரை ஆண்டு நடப்பதும் மார்கழி மாதம் 01ம் தேதி (16-12-2014) செவ்வாய்கிழமை ஏழரை ஆண்டு சனி ரத்தாவதும், ஆதாயம் 58 விரையம் 37 (19 லாபம்) வாயு மேகம் வருவதும், மழை முக்குருணி 3 மரக்கால் மழையும் மகர சங்கராந்தி புருஷர் ஆண்யானை வாகனம் காஜீ நாமகரணம் மந்தன் என்கிற பெயரால் ஸ்தான சலனமும் புரட்டாசி, பங்குனி மாதங்களில் பாதாளத்தில் இரண்டு சந்திர கிரகணங்கள் பிடித்து விடுவதும், இவ்வாறு கூடிய கிரக சஞ்சார காலங்களில் குழப்ப நிலமையுடன் இந்த ஜய வருடம் பிறக்கிறது.

இதன் பலன் யாதெனில் பருவ காலங்களில் பருவம் தவறி விரைவாக காற்று உற்பத்தி ஆகி இடி மின்னலுடன் மழையும் மேக கர்ஜணையுடன் பச்சை வில் போட்டு மழையும் பொழியும். பெட்ரோல், டீசல், எரிவாயு விலை ஏற்றமும் நிலக்கரி பற்றாகுறையும் உண்டாகும். இனிப்புகள், தங்கம், செம்பு, இரும்பு விலை ஏற்றம் கடுமையாக இருக்கும். அரசாங்க வருமானம் உயரும். எல்லையில் கண்காணிப்பு அதிகரிக்கும். புரட்டாசியில் ஏற்படும் கிரகணங்களால் கடல்களில் விபத்துகள் நேரும். நீர் தேக்கங்கள் பாதிப்படையும். கடல் வாழ் உயிரினங்கள் பாதிப்புகள் பெறும். சூரியனின் புயல் கதிர் வீச்சுகளால் விமான சேவைகள் பல நாடுகளில் பாதிப்படையும்.

பங்குனி முதல் சித்திரை வரை தென்கோடு உயர ஆலங்கட்டி மழை அயல் நாடுகளில் பெய்யும். விவசாய நிலங்களில் உள்ள எலிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டு விளைச்சல் பெறுகும். நல்ல மழைப்பொழிவு இருக்கும். ஆடி மாதத்தில் கிழக்கே இந்திரவில் போடுவதால் கலகம் உண்டாகும். ஆவணி 8, 9 தேதிகளில் வானம் குமுறுதலும் மாலை வேளையில் சீக்கிரம் இருட்டாவதும் வானம் மந்தமாகவும் இருக்கும். இந்த ஆண்டு எந்த வேலையும் திங்கள் கிழமை செய்வது நலம் தரும்.

உலக அளவில் ஏழரை சனி என்பதால் பல இடங்களில் பிரளயங்கள் ஏற்படலாம். விமான சேவைகள் அடிக்கடி பாதிப்பிற்கு உள்ளாகும். பறவைகளாலும் தொந்தரவுகள் ஏற்படும்.

சித்திரை அக்னி நட்சத்திர தோஷ வேளைகளில் ஈசல், எறும்பு கூட்டம் கூடுதல், தவளைகள் கத்துதல், பூச்சிகளின் ரீங்காரம், கடல் நீர் மட்டம் உள்வாங்குதல், மழை இருக்கும். மத்தியில் அரசாங்கத்தில் புதிய மாற்றங்கள் வரும். மாநில ஆட்சியில் குழப்பங்கள் இருக்காது. தங்கம், வெள்ளி, செம்பு, மின்சாரம், அலுமினியம், கார் விலை அதிகரிக்கும். மணல் பிரச்சனை தீரும்.

இந்த ஆண்டு 15 காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் உருவாகி 2 பலகீனம் அடையும். ஏனையவை பலம் பெற்று தமிழகத்தில் மழை பொழிவை ஏற்படுத்தும். தென்னை விவசாயம் பாதிப்பு ஏற்பட்டு தேங்காய் விலை உயரும். அரசாங்க வரி வருவாய் அதிகரிக்கும். குதிரை விலை குறையும். நூல், பஞ்சு, ரப்பர், அச்சு இயந்திரங்கள், புல்டோசர் விலை குறையும். வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும். புளி, இனிப்புகள் விலை ஏறி இறங்கும். நெல், அரிசி, கோதுமை, மஞ்சள் விலை ஏறும். விளையாட்டு வீரர்கள், சினிமா துறையினருக்கு லாபங்கள் அதிகரிக்கும். பூண்டு, வெங்காயம் விலை குறையும். மஞ்சள் வியாபாரத்திற்கு அரசு சில கட்டுப்பாடுகளை கொண்டு வரும். இது நிலையில்லா வியாபாரமாக இருக்கும். எண்ணை வித்துகள், கொப்பரை விலை ஏறும். முட்டை வியாபாரம் பாதிக்கும். அக்டோபர் கடைசி வாரத்தில் இருந்து நவம்பர் முதல் வாரம் வரை வடக்கு வடகிழக்கில் நல்ல மழை இருக்கும்.

இந்த ஆண்டில் வரும் பெயர்ச்சிகள்:

குரு ஜய ஆண்டு வைகாசி மாதம் 30ம் தேதி (13-06-2014) வெள்ளிக்கிழமை மாலை மணி 06:03க்கு புனர்பூசம் நட்சத்திரம் 4ம் பாதம் கடக ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். பின் கார்த்திகை மாதம் 17ம் தேதி (03-12-2014) புதன் கிழமை மாலை 05:10க்கு மகம் நட்சத்திரம் 1ம் பாதம் சிம்ம இராசிக்கு அதிசார பலம் பெற்று பெயர்ச்சி அடைகிறார். பின் மார்கழி மாதம் 07ம் தேதி (22-12-2014) திங்கள் கிழமை பகல் 12:19க்கு ஆயில்யம் 4ம் பாதம் கடக ராசிக்கு வக்ரம் அடைந்து பெயர்ச்சி அடைகிறார்.

சனி ஜய ஆண்டு மார்கழி மாதம் 01ம் தேதி (16-12-2014) செவ்வாய்கிழமை பகல் 02:17க்கு விசாகம் நட்சத்திரம் 4ம் பாதம் விருச்சிக இராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.

ராகு ஆனி மாதம் 07ம் தேதி (21-06-2014) சனிக்கிழமை பகல் 11:18க்கு சித்திரை நட்சத்திரம் 2ம் பாதம் கன்னி இராசிக்கும், கேது பகவான் அதே நாள் அதே நேரத்தில் ரேவதி நட்சத்திரம் 4ம் பாதம் மீனம் ராசிக்கும் பெயர்ச்சி அடைகிறார்கள்.

கந்தாய பலன்களின் அடிப்படையில் அஸ்வினி, ரோகிணி, திருவாதிரை, புனர்பூசம், ஆயில்யம், மகம், உத்திரம், ஸ்வாதி, விசாகம், மூலம், திருவோணம், சதயம், பூரட்டாதி, ரேவதிக்கு வருடம் முழுவதும் உத்தம பலன்களாகும். பரணி, பூரம், சித்திரை, அனுசம், பூராடம், உத்திரட்டாதிக்கு இரண்டாம் நான்கு மாதங்கள் (ஆவணி – கார்த்திகை வரை) மத்திம பலன்கள் ஆகும். ஏனைய மாதங்கள் உத்தம பலன்கள் ஆகும். உத்திராடத்திற்கு சித்திரை முதல் ஆடி வரை மத்திம பலன் ஏற்பட்டு பின் உத்தமமாகும். மிருகசீரிஷம், பூசம், ஹஸ்தம், அவிட்டம் ஆகிய நட்சத்திரங்களுக்கு வருடம் முழுவது சற்றேறக்குறைய மத்திம பலன்களே கிட்டும். இருப்பினும் அவிட்டம் முதல் நான்கு மாதங்கள் நன்றாக இருக்கும். ஹஸ்தம் இரண்டாம் நான்கு மாதங்கள் நன்று என அறியவும்.


Monday, March 10, 2014

வியக்க வைக்கும் வீரப்பூர் - வேடபரி - குதிரைத்தேர்

வணக்கம்

இந்த ஆண்டும் சிறந்த முறையில் அண்ணன்மார் அன்னதானக்குழு சார்பில் வீரப்பூரில் வேடபரி தினமான சனிக்கிழமை அன்று பக்தர்களுக்கு அன்னதானம் சிறப்பாக வழங்கப்பட்டது. 20 ஆண்டுகளாக இந்த திருப்பணி பக்தர்களுக்கு பயனளிக்கும் வண்ணம் செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


மகாமுனீஸ்வரர்






கலர் கலர் இனிப்புகள்

பக்தர்கள் கூட்டத்தின் ஒரு பகுதி