Sunday, November 24, 2013

சினிமா விமர்சனம் – இரண்டாம் உலகம்

திரைப்பட விமர்சனங்களை எழுத வேண்டாம் என்றுதான் இருந்தேன். ஆனால் இந்த படம் என்னை எழுத வைத்துவிட்டது. எந்திரன் என்னும் ஒரு படம் வந்தது. உலகம் முழுவதும் ரிலீஸ். ஆனால் கரூரில் உள் நாட்டு அரசியலால் ரிலீஸ் ஆகவில்லை. ஆம். ஆகவில்லை. 15 நாட்கள் கழித்து கரூரில் யாருமே சென்று பார்த்திராத ஒரு டப்பா தியேட்டரில் ரிலீஸ் செய்தார்கள். அப்படி இருந்தும் அந்த படத்திற்கு டிக்கெட் வாங்க சென்ற பொழுது காலையில் போனால் இரவு காட்சிக்குதான் டிக்கெட் கிடைத்தது. டிக்கெட் கிடைத்துவிட்டாலும் தியேட்டர் எப்படா திறக்கும் என காத்திருந்து காட்சிகள் நிரம்பின. இத்தனைக்கும் இந்த படம் கரூரிலிருந்து 15 கி.மீ. தொலைவில் ஒரு சிறிய ஊரில் ரிலீசாகி பாதிபேர் அங்கு சென்று பார்த்துவிட்டிருந்தனர்.

இந்த முன்னுரையின் தொடர்ச்சியாக நேற்று இரண்டம் உலகம் என்னும் காதல் காவிய படத்திற்கு நாங்களும் எங்கள் நண்பர்களும் குடும்பத்துடன் சென்றிருந்தோம். அரை மணி நேரம் படம் ஓடியும் சற்றும் புரியாததால் தூக்கம் கண்ணை கட்ட படம் பார்க்க வேண்டாம் என முடிவு செய்து கிளம்ப ஆயத்தமானோம். கதவை பூட்டி இருந்தார்கள். திறக்க சொல்லி கேட்ட போது தியேட்ட ஊழியர் சொன்னது குபீரென்றது. உங்களுக்காக திறந்தால் எல்லோரும் வெளியே போய்விடும் வாய்ப்பிருப்பதால் இடைவேளை வரை திறக்க இயலாது என சொல்லிவிட்டார். முதல் நாள் காட்சியில் இப்படி பாதியிலேயே முக்கால்வாசி பேர் போய்விட்டதாக அவர் சொன்னபோது அந்த பட தயாரிப்பாளரின் நிலையையும் எங்கள் நிலையையும் நொந்துகொண்டு மீண்டும் படத்தினை பல்லை கடித்துக்கொண்டு பார்த்து தொலைத்தோம். கொடுமை என்னவெனில் இடைவேளையிலும் வெளியே விட முடியாது என சொல்லிவிட்டனர். இப்படி கண்ட படம் எடுத்து நொந்த தயாரிப்பாளர்களை ஒவ்வொரு முறையும் அஜீத்தா வந்து காப்பாற்ற முடியும்?


மக்களே! உஷார். பின் நவீனத்துவ அறிவு ஜீவிகளுக்கு வேண்டுமானல் ஒருவேளை பிடிக்கலாம். 

Saturday, November 9, 2013

படித்ததில் சிரித்தது - மிருக வைத்தியம்

ஒரு பெரிய நிறுவனத்தில வேலை பார்த்துக்கொண்டிருந்த ஒரு இளைஞன். அடிக்கடி நோய் வாய்ப்பட்டுக்கொண்டிருந்தான்பெரிய பெரிய டாக்டர்களைப் போய்ப்பார்த்துமருந்து, இஞ்செக்ஷன் எல்லாம் வாங்கிப் போட்டும், எவ்விதப் பயனும்கிடைக்கவில்லை

கடைசியில் அவனுடைய புத்திசாலி மனைவி ஒரு நாள், "நீங்க மனுஷங்களுக்கு வைத்தியம் பார்க்கிற டாக்டர்களை விட்டுட்டு, ஏதாவது ஒரு நல்ல வெட்னரி டாக்டர்கிட்டே(மிருக டாக்டர்)போய்உடம்பைக் காட்டுங்க! அவர்தான் உங்களுக்க சரியான ட்ரீட்மெண்ட் கொடுக்க முடியும்" என்றாள். என்னது மிருக டாக்டர்கிட்டேயா? உனக்கென்ன மூளைகெட்டுப் போச்சா?’ன்னு சீறினான் கணவன். ‘எனக்கொண்ணும் கெட்டுப் போகல! உங்களுக்குத்தான் எல்லாமேகெட்டுப் போய் கிடக்கு!

காலாங் காலத்தாலே கோழி மாதிரிவிடியறதுக்கு முன்னமேயே எழுந்திருக்கீங்க!
அப்புறம் காக்காய்மாதிரி குளிச்சிட்டு, குரங்கு மாதிரிலபக் லபக்னு ரெண்டு வாய்தின்னுட்டு, பந்தயக் குதிரை மாதிரி வேகமாக ஓடி ஆபிசுக்குப்போறீங்க!

அங்கே போய் மாடு மாதிரி உழைக்கறீங்க! உங்களுக்கு கீழேவேலை செய்றவங்க மேலே கரடியா கத்தறீங்க!

அப்புறம் ஆபிஸ்விட்டவுடனே, ஆடு மாடுங்க மாதிரி பஸ்லே அடைஞ்சு வீட்டுக்குவர்றீங்க!

வந்ததும்வராததுமா,நாள்பூராவும்வலை செஞ்ச களைப்பிலே நாய் மாதிரி என் மேலே சீறி விழறீங்க!

அப்புறம் முதலை மாதிரிராத்திரி சாப்பாட்டைசரக் சரக்னு முழுங்கிட்டு, எருமை மாடுமாதிரி போய் படுத்து தூங்கறீங்க!

மறுபடியும் விடிஞ்சஅதேமாதிரி கோழி கதைதான்!இப்படி இருக்கிறவங்களை
மனுஷ டாக்டர் எப்படிங்க குணப்படுத்த முடியும்?

அதனாலதான் சொல்றேன், நாளைக்கே ஒரு கால்நடை டாக்டரைப் போய் பாருங்க!

என்று ஒரே மூச்சில்சொல்லி முடித்தாள் மனைவி.

என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் கணவன் முழிக்க,

மனைவி சொன்னள்`கோட்டான் மாதிரிமுழிக்காதீங்க'.


Friday, November 1, 2013

தீபாவளி நல்வாழ்த்துக்கள்


அனைத்து நண்பர்களுக்கும் 
தீபாவளி திருநாள் 
நல்வாழ்த்துக்கள் !!!