Sunday, September 28, 2014

அம்மா அரெஸ்ட் - தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்?


வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு, நான்கு ஆண்டு சிறை தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கும், தலா நான்கு ஆண்டுகள் சிறை மற்றும் தலா, 10 கோடி ரூபாய் அபராதம் விதித்து, சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக முதல்வர் ஜெ., பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருப்பதால் இவர் முதல்வராக நீடிக்க முடியாது. இந்நிலையில், அடுத்து யாரை முதல்வராக தேர்வு செய்யலாம் என்பது குறித்து அ.தி.மு.க., வட்டாரத்தில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதன்படி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ஷீலா பாலகிருஷ்ணன், சைதை துரைசாமி , விசாலாட்சி நெடுஞ்செழியன் ஆகியோர் பெயர் அடிபடுகிறது. இதில் ஓ.பன்னீர்செல்வம், ஷீலா பாலகிருஷ்ணன், சைதை துரைசாமி ஆகிய 3 பேரும் டாப்லிஸ்ட்டில் உள்ளனராம்.

பத்திரிக்கை செய்தி - தினமலர்

Tuesday, September 23, 2014

அம்மா உணவகம் - அம்மா மருந்தகம்



கரூர் மா நகரின் அடுத்த கட்ட நல் முயற்சியாக அம்மா உணவகம் மற்றும் அம்மா மருந்தகம் செயல்பட இருக்கிறது. அம்மா உணவகம் மலிவு விலையில் உணவுகளை பல நகரங்களில் வழங்கி வரும் சூழலில் கரூரின் மையப்பகுதியான உழவர் சந்தை திடலில் (பழைய பேருந்து நிலையம்) தொடங்கப்பட உள்ளது. இந்த இடமானது வெகுஜன மக்கள் அதிகம் புழங்கும் இடம் என்பதால் உண்மையிலேயே மக்களுக்கு ஒரு வரப்பிரசாதம்தான்.

அதே போல அம்மா மருந்தகம் கோவை சாலையில் பேருந்து நிலையத்திற்கு அருகில் வர இருக்கிறது. இதுவும் மக்களுக்கு எளிதில் சென்றடையும் என்பதில் சந்தேகம் இல்லை.

ஏற்கனவே கரூரின் அமராவதி ஆற்றின் மேல் பசுபதிபாளையம் செல்ல மேம்பாலம், மண்மங்கலம் தனி தாலுகா, புதிய மருத்துவக்கல்லூரி, சாய ஆலைகளுக்கான சுத்திகரிப்பு நிலையம், பேருந்து நிலைய விரிவாக்கம் போன்ற அறிவிப்புகள் என நல்ல திட்டங்கள் கரூரை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்லும்.

நன்றிகள் பல.