Tuesday, September 23, 2014

அம்மா உணவகம் - அம்மா மருந்தகம்



கரூர் மா நகரின் அடுத்த கட்ட நல் முயற்சியாக அம்மா உணவகம் மற்றும் அம்மா மருந்தகம் செயல்பட இருக்கிறது. அம்மா உணவகம் மலிவு விலையில் உணவுகளை பல நகரங்களில் வழங்கி வரும் சூழலில் கரூரின் மையப்பகுதியான உழவர் சந்தை திடலில் (பழைய பேருந்து நிலையம்) தொடங்கப்பட உள்ளது. இந்த இடமானது வெகுஜன மக்கள் அதிகம் புழங்கும் இடம் என்பதால் உண்மையிலேயே மக்களுக்கு ஒரு வரப்பிரசாதம்தான்.

அதே போல அம்மா மருந்தகம் கோவை சாலையில் பேருந்து நிலையத்திற்கு அருகில் வர இருக்கிறது. இதுவும் மக்களுக்கு எளிதில் சென்றடையும் என்பதில் சந்தேகம் இல்லை.

ஏற்கனவே கரூரின் அமராவதி ஆற்றின் மேல் பசுபதிபாளையம் செல்ல மேம்பாலம், மண்மங்கலம் தனி தாலுகா, புதிய மருத்துவக்கல்லூரி, சாய ஆலைகளுக்கான சுத்திகரிப்பு நிலையம், பேருந்து நிலைய விரிவாக்கம் போன்ற அறிவிப்புகள் என நல்ல திட்டங்கள் கரூரை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்லும்.

நன்றிகள் பல.

No comments:

Post a Comment