Monday, April 4, 2011

ஜெயிச்சாச்சு!! ஜெயிச்சாச்சு!!!




ஒரு வழியா கிரிக்கெட் ஜுரம் முடிஞ்சது. உலக நாடுகள் எதிர்பார்த்த மாதிரியே நம்ம இந்தியா வெற்றி பெற்றது. தோனியோட ராசியோ இல்லை யுவராஜின் ஆட்டமோ மொத்தத்தில் ஜெயிச்சாச்சு. இதை வச்சி இன்னும் 10 வருசம் ஓட்டிடலாம்.

ஆஸ்திரேலியாவை வென்றவுடனே நம் கோப்பை கனவு 50% கைவசமானது. பாகிஸ்தானும் சரி இலங்கையும் சரி நம்முடன் மோதும் பலசாலிகள் இல்லை. இருப்பினும் இரு அணிகளும் தங்கள் அணியின் வெற்றிக்காக தலைகீழாக நின்றன. நான் பெரிதும் எதிர்பார்த்த சேவக் இறுதி ஆட்டத்தில் சொதப்பிவிட கம்பீரின் கம்பீரமான ஆட்டம் கைகொடுத்தது. கோலியும் நன்றாகவே விளையாடி தான் இனி இந்திய அணியில் அசைக்க முடியாத இடத்தில் இருக்கிறேன் என நிரூபித்தார். அடுத்த முக்கியமான ஆள் என்று பார்த்தால் இந்த உலக கோப்பை தொடரில் பெரிதும் சோபிக்காத ஹர்பஜன் தான். என்னாச்சு சிங்? நானும் டவுசர் போட்ட காலத்தில் இருந்து கிரிக்கெட் என்றாலே சச்சின் தான். இன்னும் சச்சின் தான் டாப் ஸ்கோரர்ராக இருக்கிறார் என்பது பெரிய ஆச்சரியம். இந்திய கிரிக்கெட்டில் சச்சின் ஒரு மைல்கல் என்பதில் சந்தேகம் இல்லை.

மொத்தத்தில் தனிப்பட்ட நபர் எவரின் தயவும் இன்றி கூட்டு முயற்சியில் கிடைத்த பொன் முட்டை இந்த உலக கோப்பை. இதே ஒற்றுமையுடன் வரும் ஆட்டங்களிலும் நம் அணி ஜெயிக்க வேண்டும்.

1 comment:

  1. yes Machiiiiiii...
    it was a fantastic moments...
    enjoyed a lot..

    ReplyDelete