Thursday, August 26, 2010

நம்ம ஊர் தெய்வங்கள்

நம்ம ஊரில் காவல் தெய்வங்களாக முனியப்பசாமியே அறியப்பட்டாலும் வடக்கில் கோலோச்சியது மாரியம்ம்னே. எனக்கு தெரிந்து முனியப்பனுக்கு ஒரு முறை திருவிழா எடுத்தார்கள். அதற்கப்புறம் இல்லை. (அந்த திருவிழாவின் போதுதான் இப்போது இருக்கும் 7 கன்னிமார் சிலையும் பெரிய முனியப்பன் சிலையும்) பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஒரு மரத்தின் கீழ் (என்ன் மரம் என்று யாருக்காவது தெரியுமா?) சாதாரண கோவிலாக இருந்தது அந்த திருவிழாவிற்கு பிறகு தினமும் சிலர் வந்து செல்லுமளவிற்கு ஒரு வழிபாட்டுத்தலமானது. அந்த கோவில் ஏரியாவில் ஒரு சிறிய சுனை இருந்தது. அதில் எப்பொழுதும் தண்ணீர் இருக்கும். தண்ணீர் வற்றும் சமயங்களில் கம்பெனியில் இருந்து வண்டியில் நிரப்புவார்கள். நம்ம கம்பெனியின் கிடாவெட்டு ஒன்று வருடத்திற்கொருமுறை நடக்கிறது.

நம்மில் அனைவரும் சைக்கிள் ஓட்ட கற்றுக்கொண்ட சமயங்களில் அடிக்கடி சென்ற இடம் இந்த கோவில்தான். ஒரு சில முறை மருந்து குடோன் வரை சென்றதுண்டு. இந்த கோவிலின் பின்பக்கம் சில பாறைகள் இருக்கும். அதில் ஏறி விளையாண்டதுண்டு. இந்த கோவிலின் பக்கத்தில் உள்ள தரிசுக்காடுகளில் அரைப்பரீட்சை லீவுகளிம் பொன்வண்டு பிடித்தல் பெரிய பொழுதுபோக்கு. இந்த கோவிலுக்கு அடுத்து பார்த்தால் நம்ம கரட்டுக்கோட்டை பெருமாள் கோவில். இது காவல் தெய்வமாக இல்லை எனினும் நம்ம ஊரின் சிறந்த கோவில்களில் இதுவும் ஒன்று. 3ம் வகுப்பு படித்த சமயம் (1985) செல்வபெருமாள் வாத்தியார் தலைமையில் அனைவரும் அணிவகுத்து இந்த மலைக்கு சென்றோம். அப்பொழுதெல்லாம் இங்கு பெரிய கோவில் இல்லை. படிக்கட்டுகளும் கிடையாது. மிட்டய்களை வாங்கிக்கொண்டு அங்கு போய் ஜாலியாக சுற்றிவிட்டு பின்பு நடராஜா என ஊர் வந்தோம். அதற்கு பிறகு அங்கு போகும் வாய்ப்பு இல்லை. திடீரென 1995ல் அங்கு ஒரு பிரம்மண்டமான மலைக்கோவில் தனியொரு நபரால் கட்டப்பட்டு கும்பாபிஷேகமும் நடைபெற்றது. ஸ்வாமி பிரமேனந்தா மஹராஜ் ( நம்ம பிரேமானந்தா தான்) தலைமையில் நடைபெற்ற விழா அது. அதுதான் அவர் கலந்து கொண்ட கடைசி விழாவாகும். அந்த விழாவிற்கப்புறம் ஒரு முறை திருவிழாவும் ந்டந்தது. பறவை என்னும் மஞ்சு விரட்டு போட்டி கூட நடத்தப்பட்டது. அந்த கோவிலில் சின்ன வயசில் மாடு மேய்த்துக்கொண்டிருந்த ஒருவர் பெரிய கோடீஸ்வரர் ஆனதும் அவர் கட்டியது ஆகும். அவருக்கு இன்றும் திருச்சியில் பெரிய இரும்பு கம்பெனி ஒன்று இருக்கிறது.

இதெல்லாம் எப்பொழுதாவது ஒரு முறைதான் ந்டந்தது. ஆனால் நம்ம மாரியம்மன் கோவில் திருவிழா மட்டும் வருடம் தவறாமல் சிற்ப்பாக ந்டந்தது. அந்த ஏரியா மக்களின் அபிமானத்தை பெற்ற அந்த கோவில் திருவிழா நடக்கும் சமயம் குப்பாயி அம்மாள் கிணற்றில் இருந்து ஒரு வேல் எடுப்பார்கள். தாரை தப்பட்டை கிழிய கிழிய அந்த வேல் கோவில் வந்து சேரும். இந்த வேலை அனைவரும் எடுக்க இயலாது. அருள் வருபவருக்கு மட்டுமே சாத்தியம். அந்த வேல் வந்ததும் விழா இனிதே களைகட்டும். மஞ்சள் நீர் ஊற்றும் விழாவன்று காலணிக்குள்ளும் எல்லா இடத்திலும் வலம் வரும். அனைவரும் ஒருவர்மேல் ஒருவர் மஞ்சள் நீர் ஊற்றி விளையாடுவோம். பிறகு இரவு சினிமா காட்சிகள். திடீர் டீக்கடை, பெட்டிக்கடைகள் சகிதம் திருவிழா இனிதே முடியும். கடைசி நாளன்று சிலர் கிடாயும் வெட்டுவர். ஒவ்வொரு வருடமும் பொங்கல் சமயத்தில் இந்த கோவிலின் அருகில் ந்டைபெறும் கண் கட்டிக்கொண்டு முட்டி உடைத்தல் வெகு பிரசித்தம். நம்மில் அனைவருமே முயற்சி செய்திருப்போம் என நினைக்கிறேன். ஒரு முறை அர்ஜுனன் அடித்தான்.

அதற்கு அப்புறம் பார்த்தால் சந்தப்பேட்டை சக்தி வினாயகர் கோவில். கோவில் பெரிய விளம்பரம் இன்றி அன்றில் இருந்து இன்று வரை சாதாரணமாகவே இருக்கிறது. ஒரு வேளை பூஜை நடக்கிறது என நினைக்கிறேன். கடைசியாக நம்ம செல்வ வினாயகர் கோவில். கம்பெனி கோவில் என்பதால் பூஜைக்கும் புனஸ்காரத்திற்கும் பஞ்சமே இல்லை. இராமனாதன் செட்டியார் உடைக்கும் தேங்காய்க்கு க்யூவில் நின்றவர்கள் நிறைய பேர். என்னையும் சேர்த்துதான். 2 முறை கும்பாபிசேகம் நடைபெற்ற கோவில் இது. முதலில் வினாயகர் கோவிலும் பின்பு முருகன் மற்றும் ஐயப்பன் கோவிலும் கட்டப்பட்டன. வினாயகர் கோவில் மட்டும் இருந்த சமயத்தில் கோவிலின் கீழ் ஒரு பைப் இருக்கும். எப்பொழுதும் நல்ல தண்ணீர் வரும். கடுமையாக விளையாடும் நாம் குடிப்பது கை கால் முகம் கழுவுவதும் அங்கேதான். இப்ப அந்த பைப் அங்கே இல்லை. சம தளத்தில் இல்லாமல் 18 படி கட்டி கோவிலை தூக்கி நிறுத்தி இருப்பர்கள். இந்த அமைப்பில் இது மாதிரி ஒரு பிள்ளையார் கோவில் இது வரை நான் எங்கும் கண்டதில்லை. பரீட்சை நடக்கும் சமயங்களில் ஸ்கூலின் பின்புறம் இந்த இந்த் கோவிலின் மர நிழல்கள்தான் படிக்கும் தளம். திடீரென்று சூலபுறத்தில் இருந்து சில முஸ்லீம்கள் இந்த கோவிலுக்கு வருவதுண்டு. அவர்களை பொறுத்தவரை அது குவாரி டூர். இந்த கோவிலின் முன்புறம் கார்த்திகை மாதம் கொளுத்தப்படும் சூந்து பிரசித்தம். சூடு தனியும் முன்பே அந்த எரிந்த கொள்ளிக்கட்டைகளுக்கு ஏக டிமாண்டு இருக்கும். எடுத்துக்கொண்டுபோய் வீட்டு தோட்டத்தில் ஏதாவது ஒரு மரத்தில் செருகி வைத்தால் நன்கு காய்க்கும் என்பது ஐதீகம். “கார்த்திகை மாசம் கம்பஞ்சோறு கைவிட்டுப் பார்த்தால் நெல்லுச்சோறு” என்னும் பாட்டு அன்று எல்லோராலும் பாடப்பட்டது.

இன்னும் சுவராஸ்யங்கள் தொடரும்

4 comments:

  1. wow..very nicely eloborated, karthi...good old memories..
    yesss...muniyappa saamy & perumal Kovil are always our favourite place...i remember we used to chat hours and hours on the rocks...

    oh..premananda visted Quarry? i didnt know that!

    then.. east or west our pillyar kovil is best! what a beautiful temple it is...so graceful place that u wont never forget!!

    i remember..i used to scripple my name at the back side of the temple believing that i will score good marks!! he he he ....(olunga padicha thaaana!) but it used to have so many lovers name too!!.. shhhhhhhhhh secret..

    anyway all are golden memories to recall!

    ReplyDelete
  2. thanks sara... JK subramaniyam's son mahendran going marry next month. He is finished his Btech and he is working now in chennai. Priya finished her MBBS.

    ReplyDelete
  3. Hi to all

    This is our Ex MLA blog for your reference

    http://svkrishnandmk.blogspot.com/

    ReplyDelete
  4. Both Mahendran & priya done a good job..happy to hear that priya is a doctor...

    have seen SVK`s blog....mm intresting...thanks karthi for the info....

    ReplyDelete